கோவை, பிப்.16- கோவை அருகே புதனன்று காலை லாரி - கார் மோதிய விபத்தில் தாய், மகன் என இருவரும் உயிரிழந்தனர். திருமணமான 2 நாளில் புதுமாப் பிள்ளை பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஷியாம் பிரசாத் (28). இவருக்கும் சுவாதி (24) என்ற பெண் ணுக்கும் கடந்த திங்கட்கிழமையன்று திருமணம் நடைபெற்றது. இந்நிலை யில், புதனன்று காலை ஷியாம் பிர சாத், அவரது மனைவி சுவாதி, தந்தை சவுடையன் (62), தாய் மஞ்சுளா (55) ஆகிய 4 பேரும் காரில் பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். சுந்தராபுரம் சிட்கோ பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே லோடு ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரியும், காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த கோர விபத்தில் கார் உருக் குலைந்து இடிபாடுகளுக்குள் 4 பேரும் சிக்கி கொண்டனர். இதையடுத்து அவ்வழியே சென்ற வர்கள் உடனடியாக காருக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடு பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொதுமக்கள் உதவி யுடன் 4 பேரையும் மீட்டனர். ஆனால், இந்த விபத்தில் படுகாயமடைந்த ஷியாம் பிரசாத் சம்பவ இடத்திலேயே பலியானார். இதன்பின் மற்ற மூவரை யும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மஞ்சுளா பரிதா பமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சவுடையன் மற்றும் சுவாதி ஆகியோர் கோவை யில் உள்ள தனியார் மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 2 நாளில் புது மாப் பிள்ளை உயிரிழந்த சம்பவம் அவ ரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.