districts

img

தேர்தல் வாக்கு எண்ணும் மையம்: ஆட்சியர் ஆய்வு

திருப்பூர், நவ.20- திருப்பூர் எல்.ஆா்.ஜி. மகளிர் கல்லூ ரியில் அமைக்கப்படும் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். திருப்பூர் மக்களவைத் தொகுதிக் குட்பட்ட திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, பெருந்துறை, பவானி, அந்தி யூர், கோபி செட்டிபாளையம் ஆகிய சட் டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட மின் னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பு அறைகள், வாக்கு எண்ணும்  மையங்கள், தேர்தல் மேற்பாா்வையா ளர்கள் அறை ஆகியவை திருப்பூர் எல். ஆா்.ஜி.மகளிர் கல்லூரியில் அமைக்கப் படவுள்ளன. இந்த மையத்தில் மேற் கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு, அடிப் படை வசதிகள் குறித்து ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாநகராட்சி  ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்ப னவர், மாவட்ட வருவாய் அலுவலர் த.ப. ஜெய்பீம், மாநகர துணை காவல் ஆணையர் வனிதா, திருப்பூர் சார் ஆட்சி யர் (பொ) ராம்குமார், துணை ஆட்சியர் கள் ஜி.திவ்யபிரியதா்ஷனி, வி.தர்ம ராஜ், குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.