இளம்பிள்ளை, ஜன.23- எடப்பாடி அருகே 20 மூட்டை தடை செய் யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், குற்றவாளி களை தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி காவல் நிலைய எல்லைக் குட்பட்டது பக்கநாடு கிராமம். இப்பகுதி யில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டி டத்தில் சனியன்று 2 ஆம்னி வேனிலிருந்து சந்தேகப்படும் மூட்டைகள் இறக்கப்படுவ தாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்து சென்றனர். அதேபோது கட்டிடம் பூட்டிய நிலையிலி ருந்ததால், கட்டிடத்தின் உரிமையாளரான ஜலகண்டபுரத்தைச் சார்ந்த முத்துக்கா ளியை தொடர்பு கொண்டபோது அவர் வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனைய டுத்து எடப்பாடி காவல் ஆய்வாளர் கோபால கிருஷ்ணன், பக்கநாடு கிராம நிர்வாக அலுவ லர் முன்னிலையில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த பிறகு அங்கு சட்டவிரோதமாக பதுக்கப்பட்டிருந்த சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை (மொத்தம் 20 மூட்டை கள்) பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளி களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.