districts

போக்குவரத்துத் துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலகுவான நிரந்தரப்பணி வழங்கக் கோரிக்கை

சென்னை, ஜூன் 25- போக்குவரத்துத் துறையில் பணிபுரிந்து வரும் மாற்றுத்திறன் னாளி ஊழியர்களுக்கான வேலைத்தன்மையில் மாற்றம் செய்து, அவர்களுக்கு இலகுவான நிரந்தரப்பணி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங் கம் கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகத்தில் போக்குவரத்துத் துறையில் பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக் கான மாநில அளவில் தனிக்கிளை அமைப்பதற்கான அமைப்பு கூட் டம் சென்னையில் ஞாயிறன்று நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு கடலூ ரைச் சேர்ந்த ராஜேஷ் தலைமை வகித்தார். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க வடசென்னை மாவட்டத் தலைவர் ஆர்.ஜெயச்சந்திரன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.மனோன்மணி, தென் சென்னை மாவட்டச் செயலாளர் எம்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு போக்குவரத் துக் கழக சிஐடியு சங்க பொதுச் செயலாளர் வி.தயானந்தம் வர வேற்றார். மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில துணைத்தலைவர் வி.ராதாகிருஷ்ணன், போக்குவ ரத்துத் துறையில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக் கென தனி அமைப்பிற்கான தேவை குறித்து பேசினார். பல்வேறு மாவட் டங்களிலிருந்து கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி ஊழியர்கள், தாங்கள் சந்தித்து வரும் பிரச்சனை கள் குறித்து விரிவாக எடுத்துரைத் தனர். முடிவில், மாற்றுத்திறனா ளிகள் சங்க மாநிலத் தலைவர் தோ.வில்சன், போக்குவரத்துத் துறையில் மாற்றுத்திறனாளி ஊழியர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்தும், இச்சங்கம் செயல்படுவ தற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கிப் பேசினார். இக்கூட்டத்தில், தமிழக அரசு போக்குவரத்துத் துறையில் பணி புரிந்து வரும் அனைத்து மாற்றுத்தி றனாளி தொழிலாளர்களையும், போக்குவரத்துத் துறை தங்க ளது சொந்த ஊழியர்களாக முழு மையாக அங்கீகரித்திட வேண் டும். மாற்றுத்திறனாளி தொழிலா ளர்களுக்கான வேலைத்தன்மை யில் (category) மாற்றம்செய்து, அவர்களுக்கு செய்வதற்குரிய இலகுவான நிரந்தரப்பணி தொடர்ச் சியாக வழங்க வேண்டும். நிரந்தர மாற்றுத்திறனாளிக்கான சான்று வைத்திருப்போரை மீண்டும்,மீண் டும் மருத்துவ குழுமத்திடம் சென்று மருத்துவச்சான்றிதழ் வாங்கிவர வற்புறுத்தக்கூடாது. அனைத்து மாற்றுத்திறனாளி ஊழியர்களுக் கும் பிடித்தம் எதுவுமின்றி முழு ஊர்திப்படியும் உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து 15 பேர் பேர் கொண்ட அமைப்புக்குழு ஏற்ப டுத்தப்பட்டது. அமைப்புக்குழுவின் கன்வீனராக வி.ராதாகிருஷ்ணன், துணை கன்வீனராக வி.தயானந் தன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.