districts

ஒவ்வொரு மாநிலப் பால் நிறுவனமும், அதன் வரம்பை மீறக் கூடாது

உதகை, ஜூலை 15- ஒவ்வொரு மாநிலப் பால் நிறு வனமும், அதன் வரம்பை மீறக் கூடாது என பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறினார். நீலகிரி மாவட்டம், உதகையில்  உள்ள தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு இணையம், கருவூல ஜெர்சி பொலிக்காளை பண்ணையை, பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் வெள்ளியன்று ஆய்வு மேற்கொண் டார். பின்னர், இத்தலார் ஊராட்சிக் குட்பட்ட அப்புக்கோடு பகுதியில் ரூ.22 லட்சம் மதிப்பில் மகளிருக் கான புதிய முதன்மை பால் உற் பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் திறந்து வைத்து, மாவட்ட முன் னோடி வங்கி சார்பில் 8 பய னாளிகளுக்கு கறவை மாடுகள் கட னுதவி தொகை தலா ரூ.1.42  லட்சம் வீதம் ரூ.11.36 லட்சத்துக் கான ஆணைகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாள ரிடம் கூறியதாவது: நீலகிரி மாவட் டத்தில் ஆவினுக்கு சொந்தமான கருவூட்டல் பொலிகாளை பண் ணையில் மிகவும் சிறந்த மரபு திறன்  உள்ள ஜெர்சி,  ப்ரீசியன் வகைகளை  சேர்ந்தசுமார் 157 காளைகள் சுகாதா ரமான முறையில் வளர்க்கப்பட்டு  சிறப்பான முறையில் பராமரிக்கப் பட்டு வருகின்றன. இந்த காளை கள் மூலம் உறைவிந்து சேகரிக் கப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள 27  மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி யாளர்கள் ஒன்றியங்களின் பால்  உற்பத்தியாளர்களின் கால்நடை களுக்கு செயற்கை முறை கரு வூட்டலுக்காக விற்பனை செய்யப் படுகின்றன.  இந்த செயற்கை முறை கரு வூட்டலினால் பசுக்களின் பால்  உற்பத்தி திறனை தொடர்ந்து பெருக்கவும், நமது நாட்டிலுள்ள கறவை மாடுகளின் ஒட்டு மொத்த  தரம் உயர வழிவகை  செய்வதோடு,  அதிக உற்பத்தி திறன் மற்றும் தர மான வம்சாவழி மூலம் பால் உற் பத்தியாளர்கள் லாபம் பெறவும்,  கிராமப்புறங்களில் ஆண்டு தோறும் நிரந்தரமான வேலை வாய்ப்பை உருவாக்கவும் முடியும்.  பால் உற்பத்தி என்பது ஒரு  நிலையான, லாபகரமான, வருமா னத்தை பெருக்கக்கூடிய தொழில் ஆகும்.

தமிழ்நாட்டின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் பால் முக்கிய  பங்கு வகிக்கிறது மக்கள் தொகை யும் கூடி வருகிறது பால் தேவை அதிகரிக்கிறது. அதனால், ஆவின் நிறுவனம் தன்னிறைவு அடையும். இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறோம். அதன் ஒரு பகுதி யாக ஆவின் நிறுவனத்தின கட்ட மைப்பு மாற்ற வேண்டும். பால்  கொள்முதல் அதிகரிக்க வேண்டும்  உதகையில் சில கட்டமைப்புகளை மாற்றி பால் கொள்முதலை வேகப் படுத்த வேண்டும். சுற்றுலா பயணி கள் வரும் இடம் என்பதால் இலக்கை நிர்ணயித்து செயல்பட  ஆய்வு கூட்டம் நடத்த உள்ளோம். ஆவின் நிறுவனத்தின் இனிப்பு கள் சுவை உள்ளவை எனக் கூறு கிறார்கள். மேலும் அதன் சுவையை  கூட்ட ஆராய்ச்சி குழுவை நிய மித்துள்ளோம். தீபாவளிக்கு சிறப்பு  இனிப்புகளை அறிமுகப்படுத்த  உள்ளோம். ஆவின் நிறுவனத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. ஆவின் பால் தரமாக உள்ளது  பொதுமக்கள்  நம்பி வாங்கலாம். பாலின் தரத்தை அறிய ‘ஸ்பாட்  டெக்னாலஜியை’ அறிமுகப்படு;த தியுள்ளோம். ஒவ்வொரு மாநில பால் நிறுவனமும். அதன் வரம்பை  மீறக் கூடாது. ஒரு நிறுவன பால்  வடிப்பு பகுதியை இன்னொரு நிறுவனம் மீறுவது மரபு அல்ல. ஆவின் நிறுவன வடிப்பு பகுதியை காப்பாற்ற தமிழகதுக்கு உரிமை உள்ளது, என்றார். மேலும், நீலகிரி மாவட்டத்தில் ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்கப்படுவது குறித்து கேட்ட தற்கு, அது குறித்து ஆலோசித்த முடிவெடுக்கப்படும் என்றார்.  இந்த ஆய்வின் போது, பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை இயக்குநர் வினித், மாவட்ட ஆட்சியர் சா.ப. அம்ரித், ஆவின் பொது மேலாளர் ஜெயராமன், மண்டல மேலாளர் கால்நடை பராமரிப்புத்துறை பகவத்சிங், கருவூல ஜெர்சி பொலி காளை பண்ணை துணை பொது  மேலாளர் (பொ) சைலேந்திர குமார் உட்பட பலர் கலந்து கொண் டனர்.