சேலம், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் சுற்றுச் சூழலை காக்கும் வகையிலும், பார்வையாளர்களின் வசதிக் காகவும் பேட்டரியால் இயங்கும் இ-சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. சேலம் மாநகர பகுதியில் இருந்து சுமார் 12 கி.மீ தொலை வில் ஏற்காடு மலை அடிவாரத்தில் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா 1981ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2008 ஆம் ஆண்டு சுமார் 78 ஏக்கர் பரப்பளவில் பூங்கா விரிவாக்கம் செய்யப்பட்டது. இங்கு கடமான், புள்ளிமான், முதலை, ஆமை, மலைப்பாம்பு, நரி, மயில், குரங்கு, வெளிநாட்டு நீர் பறவைகள் மற்றும் பல்வேறு வகை கிளிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வண்ணத்துப்பூச்சி பூங்கா, பன்னம் செயற்கை அருவி ஆகியவை அமைக்கப்பட்டு பார் வையாளர்களை கவரும் வகையில் உள்ளது. இதனிடையே, சிறு பூங்கா என்ற நிலையில் இருந்து நடுத்தர பூங்கா என்ற நிலைக்கு மேம்படுத்த தமிழ்நாடு அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில், அட்டவணை 1 இல் உள்ள சிங்கம்,புலி, சிறுத்தை உள்ளிட்ட 10 வகை விலங்குகளை கொண்டு வர வனத்துறை திட்ட மிட்டுள்ளது.
மேலும், பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மூன்று பேட்டரி வாகனங்கள் இயக் கப்பட்டு வருகின்றன. தற்போது பூங்காவை சுற்றி பார்க்கும் வகை யில் 10 பேட்டரியில் இயங்கும் இ- சைக்கிள் (மிதிவண்டி) அறிமுகம் செய்துள்ளது. இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது, சேலம் மாவட்டம், ஏற்காடு மலை அடிவா ரத்தில் உள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது பூங்காவை எளிதாக சுற்றி பார்க்கும் வகை யில் பேட்டரியால் இயங்கும் இ- சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. சுமார் 10 சைக்கிள்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த வகை சைக்கிள்கள் ஒவ்வொன்றும் தலா ரூ.32 ஆயிரம் மதிப்புடையதாகும். இந்த சைக்கிள்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.50 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இ- சைக்கிள் திட்டம் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்களிடையே நல்ல வர வேற்பைப் பெற்றுள்ளது, என்ற னர். மேலும், இங்கு உள்ள பறவை கள் மற்றும் உயிரினங்களை பரா மரிக்க ஆகும் செலவை கல்வி நிறுவ னங்கள், சமூக அமைப்புகள், பொது மக்கள் என பலர் ஏற்று வருவது தற் போது அதிகரித்துள்ளது என வன அதிகாரி பன்னீர்செல்வம் தெரி வித்தார்.
- சேலம் எழில்.