கோவை, ஜூன் 15- வெயியின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், விளைச்சல் குறைந்து, காய்கறிகள் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ள தாக வியாபாரிகள் தெரிவித்துள் ளனர். கோவை, டவுன்ஹால் பகுதி யில் உள்ள தியாகி குமரன் மார்க் கெட்டிற்கு தொண்டாமுத்தூர், காரமடை, அன்னூர், மேட்டுப் பாளையம் போன்ற பகுதிகளிலி ருந்தும், கொடைக்கானல், உதகை போன்ற வெளி மாவட்ட பகுதி களிலிருந்தும், வெளி மாநிலங் களில் இருந்தும் காய்கறிகள் விற் பனைக்கு கொண்டு வரப்படு கின்றன. இதனால் தியாகி குமரன் மார்க்கெட் எப்போதும் மக்கள் நட மாட்டம் மிகுந்த பகுதியாக காணப் படும். இந்நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும், வெயிலின் தாக்கம் காரணமாக காய்கறி விளைச்சல் குறைந்துள் ளது. இதனால் கோவைக்கு வெளி மாவட்ட, மாநிலங்களில் காய் கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக காய்கறிகள் விலை அதிகரித்திருப்பதாக வியாபாரி கள் தெரிவித்துள்ளனர். தற்போது தியாகி குமரன் மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.50க்கும், உருளைக்கிழங்கு ரூ.25க்கும், வெங்காயம் ரூ.50க்கும், கத்தரிக் காய் ரூ.50க்கும், வெண்டைக்காய் ரூ.50க்கும், முட்டைகோஸ் ரூ. 20க்கும், பீட்ரூட் ரூ.30க்கும், கேரட் ரூ.40க்கும் விற்பனையாகி வரு கிறது. இதுகுறித்து காய்கறி வியா பாரி மணிகண்டன் என்பவர் கூறு கையில், விளைச்சல் குறைவு காரணமாக மார்க்கெட்டுக்கு காய் கறி வரத்து குறைந்துள்ளது. இத னால் விலை அதிகரித்துள்ளதால், காய்கறி வாங்கவே மக்கள் தயங்கி வருகின்றனர். ஒரு கிலோ காய்கறி வாங்குபவர்கள் விலை உயர்வு காரணமாக, அரை கிலோ மட்டுமே வாங்கி செல்கின்றனர். வெளி மாநி லங்களிலிருந்து கொண்டு வரப் படும் காய்கறி வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. உள்ளுர் பகுதி களிலிருந்தும் காய்கறி வரத்து பாதியாக குறைந்துவிட்டது. தற் போது விற்பனை மந்தமாக உள் ளது.” என்றார்.