உதகை, செப்.15- இ - பாஸ் நடைமுறையில் உள்ள தால், உதகை வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை வெகு வாக குறைந்துள்ளதால், வியாபாரி கள் கவலையடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகையி லுள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா, பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங் களை கண்டு ரசிப்பதற்காக நாள் தோறும் ஏராளமான சுற்றுலாப் பய ணிகள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவது வழக்கம். குறிப்பாக, முதல் சீச னான ஏப்ரல் மற்றும் மே மாதங்க ளில் அதிகளவு சுற்றுலாப் பயணி கள் வருவார்கள். அதற்கு அடுத்தப் படியாக 2 ஆம் சீசனான செப்டம் பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வருவது வழக்கம். 2 ஆம் சீசன் போது, ஓணம் பண்டிகை விடுமுறையின் போது, அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் இருந்து அதிகளவு சுற்றுலாப் பய ணிகள் வருவார்கள். ஓணம் பண் டிகை முடிந்த பின், 10 நாட்கள் வரை கேரள மாநில சுற்றுலாப் பய ணிகள் உதகையில் முகாமிடுவார் கள். இதனால், இங்குள்ள விடுதி கள், காட்டேஜ்கள் மற்றும் அனைத்து வகையான தங்கும் விடுதிகளும் நிரம்பி வழியும். அனைத்து சுற்றுலாத் தலங்க ளுக்கு செல்லும் சாலைகள் மற் றும் முக்கிய சாலைகளில் சுற்று லாப் பயணிகளால் வாகன நெரிசல் காணப்படும். இதனால், ஓணம் விடு முறையின் போது உதகையில் சுற்று லாப் பயணிகள் கூட்டத்தால் களை கட்டும். தற்போது கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு உதகை வரும் சுற்றுலாப் பயணிகளை கட் டுப்படுத்தும் நோக்கில் உயர்நீதி மன்றம் உத்தரவின் பேரில் தமிழக அரசு இ - பாஸ் முறையை அறிமுகம் செய்தது. மேலும், கோடை சீசன் மே மாதத்துடன் முடிந்த போதிலும், செப்.30 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்வதாக தமிழக அரசு அறிவித் தது. இதனால், பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் உதகை வருவதை கடந்த 4 மாதங்களாக தவிர்த்து வருகின்றனர். இந்நிலை யில், ஓணம் பண்டிகையை முன் னிட்டு, சனிக்கிழமை முதல் உதகை வரும் சுற்றுலாப் பயணிகள் எண் ணிக்கை உயரும் என வியாபாரிகள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்த்திருந்தனர். காவல் துறை யினரும் போக்குவரத்து சீரமைப்பு போன்ற பணிகளில் அதிக கவனம் செலுத்தி வந்தனர். ஆனால், ஞாயி றன்று வழக்கத்தை காட்டிலும் சுற்று லாப் பயணிகள் வருகை குறைந்தே காணப்பட்டது. இதற்கு காரணம் இ - பாஸ் நடைமுறையே என வியாபாரி கள் தெரிவித்துள்ளனர். இ - பாஸ் எடுத்துக்கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயம் உள்ள நிலையில், உதகைக்கு வருவதை தவிர்த்துவிட்டு பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் அண்டை மாநிலமான கர்நாடகம் மற்றும் இதர பகுதிகளுக்கு செல்வதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால், நீலகிரியில் சுற்று லாத் தொழில் மிகவும் பாதிக்கும் என சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் வியாபாரிகள் கவலையுடன் தெரி வித்துள்ளனர்.