districts

போதிய மழை இல்லாததால் சீத்தாப்பழம் விளைச்சல் பாதிப்பு

தருமபுரி, செப்.20- பென்னாகரம் அருகேயுள்ள மலை கிராமங்களில் சீத்தாப்பழம் தண் ணீரின்றி காயந்து கருகியுள்ளது, கடந்த  ஆண்டு டன் கணக்கில் அறுவடை  செய்து, ரூ.1 கோடி வரை விற்பனை யான நிலையில்,  மழையில்லாததால், விளைச்சல் பாதித்து, வருவாய் கிடைக் கவில்லை என மலை கிராம விவசாயி கள் கவலையடைந்துள்ளனர்.  தருமபுரி மாவட்டம், பென்னாகரம்  பகுதியில் உள்ள பிக்கிலி, மலையூர்,  வாரக்கொல்லை உள்ளிட்ட மலை கிரா மங்களில் விவசாயிகள்  சீத்தாப்பழம் சாகுபடி செய்துள்ளனர். மலைப்பகுதி களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் இயற்கையாக இங்கு நிலவும்  சீதோசன நிலையால் சீத்தாப்பழம் அதிக  அளவில் மகசூல் தருகிறது. மலைக் கிராமத்தில் விளையும் சீதாப்பழங் களை வியாபாரிகள் நேரடியாக வந்து  கொள்முதல் செய்து சென்னை, கோவை, கேரளம் போன்ற பகுதி களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.  இந்நிலையில், இந்த ஆண்டு பருவ மழை ஏமாற்றியதால், சீத்தாப்பழம் விளைச்சல் தொடங்குகின்ற நேரத்தில்  செடிகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. இதனால் செடிகளில் காய்கள் முழுவதும் தண்ணீர் இன்றி  காய்ந்து கருகி, கீழே கொட்டியது.  மேலும் மழை தாமதமாக பெய்து வருவ தால், தற்பொழுது ஒரு சில செடிகளில்  மட்டும் காய்கள் பிடித்து வருகிறது.  ஆனாலும் வெள்ளை பூச்சிகள் தாக்கு தல் இருப்பதால், அந்த பழங்களையும்  வியாபாரிகள் வாங்குவதில்லை. மேலும் குரங்குகள் காலை மாலை  இருவேளை சீதா காய்களையும் வளங் களையும் உணவுக்கு எடுத்துக் கொண்டு காய்களை சேதப்படுத்தி வரு கிறது. இதனால் விவசாயிகளுக்கு இந்த  ஆண்டு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. அதே போல் கடந்த ஆண்டு தினமும் 20 முதல்  30 கூடை வரை அறுவடை செய்யப் பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு  விவசாயி ஓரு கூடை அறுவடை செய் வது என்பது சவாலாக இருந்து வரு கிறது. இதனால் தினந்தோறும் டன் கணக்கில் ஏற்றுமதி செய்யப்பட்ட வந்த சீத்தா பழங்கள், தற்பொழுது நாள் ஒன்றுக்கு பத்து முதல் 20 கூடைகள் வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிலும் வியாபாரிகள் யாரும் மலை  மீது வராததால், விவசாயிகளே ஒன்றி ணைந்து பிக்கப் வாகனங்கள் மூலம்  பாப்பாரப்பட்டி பகுதிக்கு விற்பனைக்கு  எடுத்துச் செல்கின்றனர். மேலும் போக்குவரத்து வசதி இல்லாததால், ஒரு கூடை 300 ரூபாய் வரை விற்பனை  ஆகின்ற நிலையில், வண்டி வாடகை  கூடைக்கு 100 ரூபாய் கொடுக்கப்படு கிறது. இதனால் இந்த ஆண்டு சீத்தாப் பழம் விற்பனையில் போதிய வருவாய் கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.