districts

img

வனப்பகுதியில் வறட்சி - சாலையில் உலாவும் வன விலங்குகள்

கோவை, மார்ச் 26- வனப்பகுதியில் வறட்சியின் எதிரொலியாக கோவை யொட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி சாலை யோரங்களில் வன விலங்குகள் இயல்பாக உணவு, நீருக் காக அலைவது அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தற்போது கோடை வெயில் தாக்கத்தினால் நீர்நிலைகள் வற்றி, வனப்ப குதியில் வறட்சி அதிகரித்துள்ளதால், வனத்தில் உள்ள யானை, புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் சாலையோ ரத்தில் உலா வருகிறது. இதன் காட்சிகள் தற்போது  வைரலாகி வருகிறது.  இதில், வால்பாறை கவர்கல் பகுதியில் ஒற்றைக் காட்டு  யானை பசியினால் பலா மரத்திலிருந்து பலா பழத்தை  பறிக்கும் காட்சியும், கேரளா வனப்பகுதி குரியார் குட்டி  பகுதியில்ஒற்றை யானை தண்ணீர் குடிக்க வரும்  பொழுது தன்உடம்பை அசைத்து அழகாக ஆடிய  காட்சியும் பதிவாகி உள்ளது. மேலும், பரம்பிக்குளம்  செல்லும் வழியில் உள்ள ஆனைபாடி செக்போஸ்ட்  அருகில்  சாலையில் செல்லும் ஒற்றை சிறுத்தை காட்சியும், கேரளா வனத்துறையினர் இரவில் வாகன ரோந்து சென்ற  பொழுது சாலையோரம் ஒற்றை புலி நடமாடிய வீடியோ  காட்சியும் தற்போது மலைவாழ் மக்கள் மற்றும் வனத் துறையினர் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக உள்ளது.