சேலம், ஜூன் 13- சேலம் சரகத்தில், போக்குவரத்து விதி முறையை மீறிய 174 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதென போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம், தருமபுரியில் சாலை விபத்து களை குறைக்க போக்குவரத்து அதிகாரி கள், போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிவேகமாக வாக னம் ஓட்டுவது, சிக்னலை மதிக்காமல் செல்வது, அதிக பாரம் ஏற்றுவது, சரக்கு வாக னத்தில் பொது மக்களை ஏற்றுவது போன்ற சாலை விதிமீறல்களில் ஈடுபடுவோரின் உரி மம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு வருகி றது. மேலும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, போதையில் வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோ ருக்கு 3 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய் யப்படுகிறது.
அதன்படி, சேலம் சரகத்திற் குட்பட்ட சேலம், தருமபுரியில் கடந்த மே மாதத்தில் அதிவேகமாக வாகன ஒட்டிய 31 பேர், அதிக பாரம் ஏற்றி வந்த 16 பேர், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்த 21 பேர், சிக்னலை மீறிய 29 பேர், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 44 பேர், சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 25 பேர் உட்பட 174 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலு வலர்களுக்கு காவல் துறையினர் பரிந் துரை செய்தனர். இதில், போதையில் வாக னம் ஓட்டிய 8 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலி கமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.