districts

img

காலிப்பணியிடங்களை நிரப்பாததால் பணிச்சுமை ஓய்வின்றி ஓட்டுநர்கள் - நடத்துனர்கள்

திருப்பூர் ஜூன் 18- அரசு போக்குவரத்துக்கழக காலிப்பணியிடங்களை நிரப்பாததால் ஓட்டுநர்கள் , நடத்துனர்களுக்கு பணிச்சுமை  அதிகரித்து தொடர்ந்து பணிபுரிய நிர்ப்பந்திக்கப்படுகின்ற னர். அரசு போக்குவரத்துக்கழக கோவை கோட்டத்தின் கீழ்  உள்ள திருப்பூர் மண்டலதில். உடுமலை, தாராபுரம், பல்ல டம், காங்கயம் உள்ளிட்ட 8 கிளைகள் உள்ளன.மாவட்டத்து துக்கு, மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு நாள் ஒன்றுக்கு 559  பேருந்துகள் அதிகாலை முதல் இரவு வரை இயக்கப்படுகி றது.ஆனால் ஓய்வுபெற்ற ஓட்டுநர்கள், நடத்துனர் காலிப்ப ணியிடங்களை நிரப்பாததால் கிராமப்புற போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் பணிச்சுமை அதிகரித்து ஓட்டுநர் கள் , நடத்துனர்கள் மனவேதனை மற்றும் உடல்நலக்குறை விற்கு ஆளாகி வருகின்றனர்.இதனால் அரசு பேருந்து களை  நம்பி பயணிக்கும் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்ற னர். 

இதுகுறித்து ஓட்டுநர்கள் சிலர் கூறியதாவது:-

 கடந்த ஆட்சியின் போது ஓய்வு வயது 60 ஆக நீட்டிக்கப் பட்ட நிலையில் இன்னும் சில நாட்களில் பல ஓட்டுநர்கள், நடத்துனர்கள் ஓய்வு பெற உள்ளனர்.இதனால், ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படும்.  ஏற்கனவே தினமும் பணி முடிந்து வீடு திரும்பும் ஓட்டுநர்கள்,  நடத்துனர்கள் மீண்டும் பேருந்துகளை இயக்க முற்படுவ தால் போதிய ஓய்வின்றி, மன அழுத்தம், உடல் நலக் குறை வுக்கு உட்படுகின்றனர்.காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்து அரசு பேருந்துகளை தடையின்றி இயங்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.