districts

img

புதிய மேம்பாலப் பணிகள் முழுமையடையாததால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்!

நாமக்கல், பிப்.5- பள்ளிபாளையத்தில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலப் பணிகள் நிறை வடையாததால், கடுமையான போக்கு வரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் சிக்கி  தவித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் நகராட்சியில் சுமார் 30 ஆயிரம்  விசைத்தறிகளும், ஏராளமான நூற் பாலைகளும் இயங்கி வருகின்றன. இந்த தொழில்களை நம்பி நேரடியாக வும், மறைமுகமாகவும் ஒரு லட்சத்துக் கும் மேற்பட்டோர் பயனடைந்து வரு கின்றனர். பள்ளிபாளையம், குமார பாளையத்தில் உற்பத்தியாகும் விசைத் தறி ஜவுளிகள் அருகிலுள்ள ஈரோடு மாவட்டத்திற்கு தினந்தோறும் கொண்டு செல்லப்படுகிறது. பள்ளி பாளையத்தில் உள்ள 4 முனை சந்திப்பு  வழியாக நாமக்கல், திருச்சி, ஆத்தூர்,  கரூர், தருமபுரி, சென்னை, பெங்களூரு  ஆகிய பகுதிகளுக்கு நாள்தோறும்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துக ளும், கனரக வாகனங்களும் சென்று வருகின்றன. ஆயிரக்கணக்கான மக் கள் இங்கிருந்து பேருந்துகளில் பல் வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்ற னர். தொடர்ச்சியாக அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் பாதிப்பு கார ணமாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு,  ராசிபுரம் – திருச்செங்கோடு - ஈரோடு  சாலையில் விரிவாக்கப்பணி நடை பெற்று வந்தது. அரசின் நிதி பற்றாக் குறையினால் சிறிது காலம் பணியில் தொய்வு ஏற்பட்டு, தற்போது மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த மேம்பாலம் எப்போது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்ற எதிர்பார்ப்பில் பொது மக்கள் உள்ளனர். தற்போது வரை பணி கள் நிறைவடையாததால், வாகன ஓட்டி கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். எனவே, இம்மேம்பாலத்தினை விரைவில் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தேவைபடும் இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும். விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என  பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.