பள்ளிபாளையம், மே 28- பள்ளிபாளையம் அருகே கூட்டு குடிநீர் குழாய் உடைந்து வெளியே றிய குடிநீரானது, அப்பகுதியிலுள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந் தது. நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் நகராட்சிக்குட்பட்ட காவிரி யாற்றில், திருச்செங்கோடு உள் ளிட்ட பகுதிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குழாய் வழியாக குடி நீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராஜவீதி பகுதியில் செல்லும் ராட்சச குடிநீர் குழாய் ஞாயி றன்று திடீரென உடைந்தது. இத னால் அதிகளவில் வெளியேறிய குடி நீர், அருகிலுள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் வீட்டிலிருந்த துணிகள் உட்பட அனைத்து பொருட்களும் சேதமடைந் தன. மேலும், அருகில் செயல்படும் விசைத்தறிக்கூடங்கள், ஜவுளிக் கடை குடோன்களில் நீர் புகுந்ததால் அனைத்து பொருட்களும் நீரில் மூழ் கியது. இதுகுறித்து தகவலறிந்து வந்த பள்ளிபாளையம் நகராட்சி ஊழியர் கள், மின் மோட்டார் மூலம் வீடுகளுக் குள் தேங்கியிருந்த நீரை வெளி யேற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற் கிடையே குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக, உடைப்பு ஏற்பட்ட பகுதி யில் மண்சரிவு ஏற்பட்டு சாலையில் பள்ளம் ஏற்பட்டது. தற்போது பள்ளிபாளையம் - திருச்செங்கோடு சாலையில் மேம் பால பணிகள் நடைபெற்று வருவ தால், பள்ளிபாளையத்திலிருந்து குமாரபாளையம் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக, ராஜவீதி குறுக்கு சாலையை அதி களவு வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அழுத்தம் ஏற்பட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து திருச்செங்கோடு கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும், பொதுமக்க ளுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்பட்டுள்ளதாக நகர்மன்ற தலை வர், துணைத்தலைவர் தெரிவித்த னர்.