அந்தியூர், ஜூலை 2- குடிநீர் பஞ்சத்தை போக்க வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. அந்தியூர் ஒன்றியத்தை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். நியாயமான விலையில் மணல் வழங்க வேண்டும். 100 நாள் வேலைக்கு வரும் அனைவ ருக்கும் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். 5கிமீக்கு அப்பால் வேலைக்குச் செல்வோருக்கு வாகன வசதியு டன், 10 சதவிகித பயணப்படியுடன் சட்டக்கூலி ரூ.229 வழங்க வேண்டும். தாமதமாக வழங்கப்படும் கூலிக்கு சட்டப்படி வட்டி சேர்த்து வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் அந்தியூர்,தவுட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் கே.குருசாமி தலைமை யில் மனு கொடுக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் கே.சண் முகவள்ளி, தாலுகா செயலாளர் எஸ்.வி.மாரிமுத்து, சிபிஎம் தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.