districts

img

அமராவதிபாளையம் கால்நடை சந்தையில் குடிநீர் வசதி

திருப்பூர், மார்ச் 14 - திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ் குமாரிடம் விவசாய சங்கங்கள் கடந்த 10ஆம் தேதி அமராவதிபாளையத்தில் உள்ள கால்நடை சந்தையில் கால்நடைக ளுக்கு தண்ணீர் தொட்டி ஏற்பாடு செய்து  தர  கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று உடனடி யாக அங்கு கால்நடைகள் தண்ணீர் குடிக்க  வசதியாக தண்ணீர் தொட்டி ஏற்பாடு செய் யப்பட்டது. திங்களன்று மாட்டு சந்தைக்கு கொண்டு வரப்பட்ட மாடுகள் அதில் தண்ணீர் பருகி தாகம் தீர்த்தன.  கால்நடை சந்தைக்கு வருகை தரும் விவசாயிகளுக்கும் தண் ணீர் வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தி வழங்கும் விதமாக சின்டெக்ஸ் அமைக்கவும், குடிநீர்  வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளதாக மாநகராட்சி செய்திக் குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.