ஈரோடு, டிச. 22- ஈரோடு பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் தூர்வாரப் படும் பணியை அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் முழு வதும் கனமழை பெய் தது. இதனால், அக்ரஹாரம், அன்னை சத்யா நகர் பகுதிகளில் உள்ள வீடு களுக்குள் மழைநீர் புகுந்தது. இப்பிரச்ச னைக்குத் தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, மக்களின் கோரிக்கைகளை ஏற்ற மாவட்ட நிர்வாகம், பிச்சைக்காரன் பள் ளம் ஓடையை தூர்வாரத் தொடங்கியது. இப்பணிகளை தமிழ்நாடு வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சர் சு.முத் துசாமி ஆய்வு செய்தார். அவருடன் திமுக மாநகரச் செயலாளர் மு.சுப்ரமணியம், மாநக ராட்சி 1ஆவது மண்டல தலைவர் ப.க.பழ னிச்சாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.