districts

img

நீரில் தேசத்தலைவர்களை வரைந்து அசத்தல்

கோவை, ஜன.24- கோவையில் குடியரசு தினத்தை முன் னிட்டு, தண்ணீரில் தேசத் தலைவர்களின் உருவங்களை வரைந்து இளைஞர் ஒருவர் அசத்தியுள்ளார். நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழா ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அரசு சார்பில் இதற்காக  பல்வேறு  ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகு தியைச் சேர்ந்த UMT ராஜா என்ற நகை  வடிவமைப்பாளர், நீரில் வண்ண கோலப் பொடி மற்றும் மாவை கொண்டு மகாத்மா காந்தி மற்றும் பாரதியாரின் படங்களை வரைந்து அசத்தியுள்ளார். வழக்கமாக இந்த பொடிகள் சிறிது நேரத்தில் நீரில்  கரைந்துவிடும் என்பதால் அது கரைவ தற்குள் இரண்டு ஓவியங்களையும் வரைந் துள்ளதே இதன் சிறப்பம்சமாக பார்க்கப் படுகிறது.