ஈரோடு, ஜன.24- மனைவி மற்றும் அவரது உறவினர்களை பழிவாங்க, சொந்த வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீசி பதட்டத்தை ஏற்படுத்தி, நாடக மாடிய பாஜகவின் மோடி பாசறை நிர்வா கியை காவல் துறையினர் கைது செய்த னர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளை யம் கூகலூர் பேரூராட்சிக்குட்பட்ட கணபதி பாளையம் மாணுவக்காடு போயர் காலனி யைச் சேர்ந்தவர் சண்முகம் (43). இவருக்கு அய்யம்மாள் (39) என்ற மனைவியும், விக் னேஷ் (15), அடல் பிகாரி வாஜ்பாய் (13), ராஜேஸ்(10) என்ற மகன்களும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சண்முகத் திற்கும் அவரது மனைவி அய்யம்மாளுக்கு மிடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அய்யம்மாள் கோபிசெட்டிபாளை யத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு மகன்களுடன் சென்று விட்டார். இந்நிலை யில், திங்களன்று அதிகாலை சண்முகம் வீட் டின் முன்பு உள்ள பகுதியில் ஏதோ ஒரு பொருள் விழும் சத்தம் கேட்டது. இதுகுறித்து சண்முகம் வெளியே வந்து பார்த்த போது, முன்பகுதியில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட் டில் இருந்தது. வீட்டிற்குள் பார்த்த போது குளிர்பான பாட்டிலில் பெட்ரோல் நிரப்பப் பட்ட நிலையில் அதில் திரியும் பொருத்தப்பட் டிருந்தது. வீசிய வேகத்திலும், தரையில் விழுந் ததாலும் தீ அணைந்து இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சண்முகம் கோபிசெட்டி பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித் தார். இதையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, எரியாமல் கிடந்த பெட் ரோல் குண்டை கைப்பற்றி விசாரணை மேற் கொண்டனர்.
மேலும், ஈரோட்டிலிருந்து மோப்ப நாய் மற்றும் கோவையிலிருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மோப்பநாய் சண்முகத் தின் வீட்டை மட்டுமே சுற்றி வந்தது. இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர், சண் முகத்திடம் நடத்திய விசாரணையில், மனைவி மற்றும் அவரது உறவினர்களை பழி வாங்க சண்முகமே தனது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. மேலும் சண்முகத் திற்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தக ராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுபற்றி அய்யம் மாளின் உறவினர்கள், சண்முகத்தை தட்டி கேட்டு உள்ளனர். இதனால் அவர்களை பழி வாங்கும் நோக்கத்துடன், சண்முகம் பெட் ரோல் குண்டை வீசி விட்டு நாடகமாடி உள் ளார். மோப்ப நாய் சண்முகத்தின் வீட்டை மட் டுமே சுற்றி வந்ததும், பெட்ரோல் குண்டிற்கு தேவையான திரியை தயாரிக்க பயன்படுத் திய வெள்ளை துணியின் மீதி பாகங்கள் சண்முகத்தின் வீட்டிலேயே கைப்பற்றப்பட் டதன் மூலம் உறுதியானது. அதைத்தொ டர்ந்து சண்முகத்தை ஜாமீனில் வெளி வர முடியாத வகையில், ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் எரிபொருளை கையாள்வது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செய்கையில் ஈடுபடுதல், வெடிபொருளை தவறாக கையாளுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளனர். இவர் பாஜகவை சேர்ந்தவர் என்பதும், மோடி பாசறையின் கோபி சட்டமன்ற தொகுதி நிர்வாகியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.