districts

img

கூலி வழங்காமல் இழுத்தடிக்கும் நிர்வாகம் விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம்

நாமக்கல், செப்.15- பள்ளிபாளையம் அருகே விசைத்தறி தொழிலாளர்களுக்கு உரிய கூலி வழங்காததால் தொழி லாளர்கள் பணி புறகணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிஐடியு தொழிற்சங்கத்தினர் அரசுத்  துறை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.  நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் அடுத்துள்ள வால்ராசம் பாளையம் பகுதியில் ஏராளமான விசைத்தறிக்கூடங்கள் செயல் பட்டு வருகின்றது. இந்நிலையில் லோகு என்பவருக்கு சொந்தமான விசைத்தறிக்கூடத்தில் சுமார் 50க் கும் மேற்பட்ட தொழிலாளர் குடும் பங்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மூன்று வாரங்களாக தொழிலாளர்களுக்கு கூலி வழங்கப்படவில்லை என தெரிகிறது. அவ்வப்போது சிறிய  அளவிலான தொகை மட்டுமே  தொழிலாளர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. இது குறித்து தொழிலாளர்கள், விசைத்தறி உரிமையாளர்களிடம் கேட்ட பொழுது விசைத்தறி உரி மையாளர்கள் முறையான பதில் அளிக்காததால், விசைத்தறி தொழி லாளர்கள் வியாழனன்று நாமக்கல்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர். மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தினர்.  இதையடுத்து, மாவட்ட ஆட்சி யரின் உத்தரவின் பேரில், பள்ளி பாளையம் நகராட்சி திருமண மண்டபத்தில், பள்ளிபாளையம் வருவாய் ஆய்வாளர் கார்த்திகா, வெப்டை காவல் நிலைய உதவி  ஆய்வாளர் மலர்விழி, வட்டாட் சியர் சண்முகவேல் மற்றும் தொழி லாளர் நலத்துறை அதிகாரிகள், விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் விசைத்தறி தொழிலாளர் கள் அடங்கிய முத்தரப்பு பேச்சு வார்த்தை வியாழனன்று நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட  விசைத்தறி உரிமையாளர்கள், கடந்த சில வாரங்களாக முறை யான கூலி தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதை ஏற்றுக்கொண்டனர். இதனால் அரசுத்துறை அதிகாரி களுக்கும், விசைத்தறி உரிமை யாளருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர், இரு  நாட்களுக்குள் ஆர்டிஓ முன்னி லையில் பிரச்சனைக்கு தீர்வு  காண்பது என முடிவெடுக்கப் பட்டது. ஆனால், விசைத்தறி தொழி லாளர்கள், நாங்கள் மீண்டும் அந்த  விசைத்தறி கூடம் உள்ள பகுதிக்கு  செல்ல மாட்டோம் என மறுத்து  வியாழன்று இரவு காவேரி ஆர்.எஸ்.தொழிற்சங்க அலுவல கத்திற்கு வந்து முறையீட்டனர். இதனையடுத்து, சிஐடியு தொழிற்சங்கத்தினர், தொழிலாளர் களுக்கு நியாயமான சட்டரீதியான கூலி உயர்வு, போனஸ் உள்ளிட்ட பிற சலுகைகள் கிடைக்கும் வகை யில் ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்தனர். மேலும், தொழி லாளர் குடும்பங்களுக்கு தேவை யான இரவு உணவு மற்றும் காலை உணவு ஆகியவற்றை தயார் செய்து வழங்கினர். தற்போது விசைத்தறி உரிமையாளர்கள், சிஐடியு தொழிற்சங்கம் மற்றும் ஆர்டிஓ உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.