திருப்பூர், அக். 7 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு மாநகர குழு செயலா ளராக த.ஜெயபால் தேர்வு செய்யப்பட் டுள்ளார். திருப்பூர் வெள்ளியங்காடு தோழர் கே.முத்துசாமி நினைவு அரங்கில் ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு மாநகர 24 ஆவது மாநாடு நடைபெற்றது. மூத்த உறுப்பினர் அ.ஜீவானந்தம் செங்கொடி யேற்றி வைத்தார். முன்னதாக கருவம்பாளையத்தில் தோழர் சீதாராம் யெச்சூரி நினைவு ஜோதி பயணத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம் ராஜகோபால் தொடக்கி வைத்தார். வரவேற்புக் குழு செயலா ளர் கோ.பொம்முதுரை வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.மூர்த்தி மாநாட்டை தொடக்கி வைத்து பேசினார். தெற்குமாநகரக் குழு செயலாளர் த.ஜெயபால் அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் செ. மணிகண்டன் வாழ்த்தி பேசினார். திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேவையான சிறப்பு மருத்துவர்கள் மற்றும் செவிலி யர்கள் கூடுதலாக நியமிக்க வேண்டும். மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட சிறப்பு சிகிச்சைக்கு உபகரணங்கள் வழங்க வேண்டும். இஎஸ்ஐ மருத்துவமனையில் அனைத்து வசதிகளையும் ஏற்ப டுத்தி முழுமையாக மக்கள் பயன்பாட் டுக்கு கொண்டு வர வேண்டும். திருப் பூரில் ஏபிசிடி என வகை பிரித்து கடுமை யாக உயர்த்தி உள்ள சொத்து வரி உயர்வை கைவிட வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட திருப்பூர் கலையரங்கத்தை மக்கள் பயன் பாட்டுக்கு திறந்து விட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநாட்டில் 13 பேர் கொண்ட தெற்கு மாநகரக் குழு தேர்வு செய்யப்பட்டது. தெற்கு மாநகரக் குழு செயலாளராக த.ஜெயபால் தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர் கே. உண்ணிகிருஷ்ணன் மாநாட்டை நிறைவு செய்து வைத்துப் பேசினார். முடிவில் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.சுந்தரம் நன்றி கூறினார்.