districts

img

மாணவர்களின் பல நாள் கோரிக்கை: பள்ளி கழிவறைகளில் கதவுகள் அமைக்கப்பட்டது

உடுமலை, ஜன.16- மனுப்பட்டி ஒன்றிய நடு நிலைப் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகளில் கதவு இல் லாமல் இருப்பது குறுத்து தீக் கதிர் நாளிதழில் கடந்த டிசம் பர் 25 ஆம் தேதி செய்தி  வெளியிட்டது. இதையடுத்து  பள்ளி கழிவறைகளில் கதவு கள் அமைக்கப்பட்டுள்ளது. உடுமலை தாலுகா மனுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் ஒன்று முதல் எட்டு வரை வகுப்புகள் நடை பெற்று வருகிறது. இந்த பள்ளியில் 130க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகிறார்கள். மேலும், இந்த  பள்ளி வளாகத்தில் இருக்கும் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகளில் கதவுகள் இல்லாமல் திறந்த வெளியில் உள் ளதை சரி செய்ய வேண்டும் என்று பல்வேறு துறை அதிகாரிக ளுக்கு மனு அளிக்கப்பட்டது. மேலும், பள்ளி வாளகத்தில்  இருக்கும் குடிநீர் தொட்டி மற்றும் வகுப்பறைகளை முறை யாக பராமரிக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் பயன்படுத்த  முடியாத நிலையில் இருக்கும் கழிவறைகளை சரி செய்ய  வேண்டும் என்று பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் தீர்மா னம் நிறைவேற்றபட்டு, கிராம சபை கூட்டத்தில் மனுவாக தெரி வித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை தீக்கதிர் நாளிதழ் கடந்த மாதம் டிச.25 ஆம் தேதி செய்தியாக  வெளியிட்டு இருந்தது. இதையடுத்து பள்ளிகளில் கதவுகள்  அமைக்கப்பட்டுள்ளது எனப் பெற்றோர்கள் தெரிவித்தனர்.