உழைப்பு தானம் செய்து நூலகம் தூய்மை பணி
திருப்பூர், ஆக.14- இந்திய தேசத்தின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முருங்கப்பாளையம் கிளை சார்பாக திருப்பூர் மாவட்டம் குமார் நகர் பகுதியில் உள்ள நூலகம் தூய்மை செய்யப்பட் டது. வாலிபர் சங்கத்தின் முருங்கப்பாளையம் கிளையைச் சேர்ந்த இளைஞர்கள் 20 பேர் உழைப்பு தானம் எனும் வகை யில் செய்தனர். நூலகத்தின் வளாகத்தில் புதர் மண்டி கிடந் திருந்த செடிகளையும், குப்பை கூலங்களையும், தூய்மை செய்தனர். பலரும் பயன்படுத்தி, பராமரிக்கப்படாமலே இருந்த நூலகத்தின் கழிவறைகளையும் முகம் சுளிக்காமல் தூய்மை செய்துள்ளனர். மேலும் நூலகத்தில் உடைந்துள்ள ஜன்னல், கண்ணாடிகளையும் பழுதடைந்துள்ள இன்ன பிற பகுதிகளையும் சரி செய்து நூலகத்தினை தொடர்ந்து தூய் மையாக பராமரித்திட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை யும் வரும் 16 ஆம் தேதி புதன்கிழமை அன்று திருப்பூர் மாநகர மேயரிடம் மனு கொடுப்பது எனவும் முடிவு செய்துள்ளனர்.
சிக்கண்ணா அரசு கல்லூரியில் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
திருப்பூர், ஆக.14 - திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில், 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கு முதுநிலைப் பட்ட வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதள முகவரி மூலம் வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 14 திங்கள்கிழமை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடை சிநாள் ஆகஸ்ட் 22. மேற்கண்ட இணையதளம் தவிர போலி யான பிற முகவரியில் ஏமாற வேண்டாம். விண்ணப்பக் கட்ட ணம் ரூ60 மட்டும். நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். கல் லூரியில் எம்.ஏ. தமிழ் இலக்கியம் (18), ஆங்கில இலக்கி யம் (18), பொருளியல் (18), எம்காம் (40), எம்காம் சர்வதேச வணிகம் (40), எம்.எஸ்ஸி கணினி அறிவியல் (25), இயற்பியல் (30), வேதியியல் (16), கணிதம் (50), விலங்கியல் (40), ஆடை வடிவமைப்பு மற்றும் நாகரிகம் (20) ஆகிய முதுநிலைப் பட்ட வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. இளநிலைப்பட்ட வகுப்புகளில் கணிதம் பயின்றவர்கள் முதுநிலை கணினி அறிவியல் பட்ட வகுப்பில் சேர விண் ணப்பிக்கலாம். முதுநிலை ஆங்கில இலக்கியம், தமிழ் இலக் கியம் பாடப்பிரிவுகளில் சேர நான்கு பருவங்கள் தமிழ், ஆங்கி லம் பயின்றவர்களும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். ஆகஸ்ட் 22 ஆம் தேதிக்கு பிறகு தரவரிசைப்பட்டியல் கல்லூரி யின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு நடை பெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இத்தகவலைக் கல் லூரி முதல்வர் முனைவர் வ.கிருஷ்ணன் தெரிவித்தார்.
அவிநாசி ஒன்றியத்தில் புதிய குடிநீர் திட்டம் சிபிஎம் ஒன்றிய கவுன்சிலர் வலியுறுத்தல்
திருப்பூர், ஆக.14 - அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் 31 கிராம ஊராட்சிகளில் ரூ.392 கோடி செலவில் அமைக்கப்படும் புதிய குடிநீர் திட்டத்தில், விடுபட்ட கிராமங்களை சேர்க்க வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவிநாசி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பி.முத்துசாமி வலியுறுத்தியுள்ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட பகுதிகளில் அரசின் வளர்ச்சிதிட்ட பணி கள் குறித்த ஆய்வுக்கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ் துராஜ் முன்னிலையில், மாநிலத் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அவிநாசி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பி.முத்துசாமி பங்கேற்று பல் வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து உரை யாற்றினார். அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 31 கிராம ஊராட்சிகளில் ரூ.392 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டம் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தில் ஊராட்சிகளில் விடுபட்ட கிராமங்கள் முழு மையாக சேர்க்கப்பட வேண்டும். கணியாம் பூண்டி சாலையில் தேங்கியிருக்கும் கழிவு நீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். காவிலிபாளையத்தில் இருந்து கணியாம் பூண்டிக்கு செல்லக்கூடிய சாலை சீர்கு லைந்த நிலையில் போக்குவரத்துக்கு லாயக்கு இல்லாமல் மிக மோசமாக இருக் கிறது. பல ஆண்டு காலமாக தொடரும் இந்த பிரச்சனைக்கு அரசு நிர்வாகம் தீர்வு காணா மல் இருக்கிறது. எனவே, அமைச்சர் நேரடி யாக கவனம் செலுத்தி இந்த சாலையை முழு மையாக சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என முத்துசாமி கேட்டுக் கொண்டார். அத்துடன் முருகம்பாளையம் பகுதியில் இருக்கும் குட்டையில் நீண்ட நாட்களாக கழி வுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுற்றிலும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. விவசா யிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே அந்த குட்டையில் இருக்கும் கழிவு நீரை வெளியேற்றி சுத்தம் செய்து தர வேண் டும், விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இவரது கோரிக்கைகள் அனைத் தையும் நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுக் கப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் உறுதி அளித்தார். இந்தக் கூட்டத்தில் அவிநாசி ஊராட்சி ஒன் றிய தலைவர் ஜெகதீசன், திருமுருகன்பூண்டி நகர மன்ற தலைவர் குமார், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சேதுராமன் உட்பட மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பல்லடம் அரசு கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு
திருப்பூர், ஆக. 14 - சர்வதேச மொழி தேர்வுகளை எதிர்கொள் வது எப்படி என்பது குறித்து உஸ்பெகிஸ்தான் பேராசிரியர் விளக்கம் அளித்தார். பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திங்களன்று ஆங்கிலத் துறை சார்பாக சர்வதேச கருத்தரங்கு நடைபெற் றது. கல்லூரி முதல்வர் மணிமேகலை முன் னிலை வகித்தார். கருத்தரங்கின் ஒருங்கி ணைப்பாளர் மற்றும் ஆங்கில துறைத்தலை வர் கிருஷ்ணவேணி கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார். இக்கருத்தரங்கில் லண் டன் மற்றும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலிருந்தும், 13 கல்லூரி யிலிருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ, மாண விகள் கலந்து கொண்டனர். இந்த ஒரு நாள் கருத்தரங்கில் உஸ்பெ கிஸ்தான் நாட்டின் சம்பிரம் பல்கலைகழகத் தின் ஆங்கிலத்துறை பேராசிரியர் ராமன் கோபால், வெளிநாட்டில் ஆங்கில கற்பிப்ப தில் மாணவர்களின் சவால்கள் மற்றும் தேவைகள் பற்றியும் மொழிகளை பற்றியும், ஈரோடு தொழில் வழிகாட்டல் இயக்குனர் சந் திரமோகன் மொழித் தேர்வுகளை எழுவது பற்றியும், கோவை பூ.சா.கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கில துறைத் தலைவர் இளமாறன் பணியிடங்களில் ஏற்ப டும் சவால்களை எதிர்கொள்வது பற்றியும் விரிவாக பேசினார்கள். இறுதியாக ஆங்கிலத் துறை கெளரவ விரிவுரையாளர் திப்புசுல் தான் நன்றி கூறினார்.
விபத்தில் குழந்தை பலி
சேலம், ஆக. 14- சேலம் வாய்க்கால் பட்டறை பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் இரு சக்கர வாகனத்தில், உறவினர் வீட்டுக்கு தனது மகள் வினிதா மற்றும் வினிதாவின் ஒன்றரை வயது குழந்தை நித்தின் ஆகியோர் இரண்டு சக்கர வாகனத்தில் அய்யோத்தியாபட்டினம் சென்றுள்ளனர். பின்னர், திரும்பி வந்து கொண்டிருந்தபோது, உடையாபட்டி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதியது. இதில், குழந்தை தவறி விழுந்து பேருந்தில் சிக்கி உடல் நசுக்கு சம்பவ இடத்திலேயே பலியானது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களின் புகைப்படங்களை வெளியிட்டு அவதூறு: இளைஞர் கைது
நாமக்கல், ஆக.14- குமாரபாளையம் அருகே 50க்கும் மேற்பட்ட பெண்களின் பெயர் மற்றும் புகைப்படங்களை அவதூறாக வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே, உள்ள தட்டாங்குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வி.மேட்டூர் பகுதியில் இளைஞர் ஒருவர் அப்பகுதியில் உள்ள பெண்கள் சிலரின் புகைப்படங்கள் கூடிய முகநூல் மற்றும் ட்விட்டர் அக்கவுண்டு களை போலியாக துவங்கியுள்ளார். அதில், ஆபாசமான வார்த்தைகள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட சம்பந்தப்பட்ட பெண்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அந்த முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களில் தங்கள் மனைவிகள் ஆபாசமாக புகைப் படம் அனுப்பியது போலவும் பேசியது போலவும் சித்தரிக் கப்பட்டிருந்ததால், குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற் கொண்டனர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் இதுபோன்று போலியான முகநூல் மற்றும் டிவிட்டர் கணக்கு களை துவங்கி ஆபாசமாக பெண்களை சித்தரித்தும், ஆபாச வார்த்தைகளை பதிவு செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, அந்த இளைஞரை கைது செய்த போலீ சார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில், காவல் நிலையம் முன்பு திரண்ட புகார் அளித்த பெண்களும், அவர்களின் உறவினர்களும் போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் களை சமாதானப்படுத்த முயற்சித்தனர். இதனையடுத்து, இச் சம்பவத்தை அறிந்து காவல் நிலையம் வந்த மூத்த வழக் கறிஞர் பா.பா. மோகன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விபரங்களை கேட்டறிந்தார். மேலும், சம்பந்தப்பட்ட இளை ஞர் மீது போக்சோ சட்டம் பாயும் என நம்பிக்கை அளித்தார். இதனையடுத்து பெண்கள் பெயரில் போலியாக முகநூல் மற்றும் டிவிட்டர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்திய இளைஞரை குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதி பதி முன்பு நேர் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
பள்ளி மாணவி மயங்கி விழுந்து பலி
அவிநாசி, ஆக.14- அவிநாசி அருகே தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், தெக்கலூர் அருகே நல்லிக்கவுண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களது மகள் கந்தேஸ்வரி (14), நாதம் பாளையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரது சகோதர் கபில்தேவ்நாத் (16). அதே பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே கந்தேஸ்வரிக்கு ஏற்கனவே உடல்நிலை பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பள் ளியில் நடைபெறும் சுதந்திர தின போட்டிகளில் பங்கேற்கவும், பார்த்து மகிழவும், திங்களன்று காலை பள்ளிக்கு வந்துள்ளார். பள்ளியில் சுதந்திர தின அணி வகுப்பு ஒத்திகை முடிந்து நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கந்தேஸ்வரி மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக ஆசிரியர்கள் மாணவியை அவி நாசி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பிறகு மேல் சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் கந்தேஸ்வரி உடல்நிலை பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தார். இதுகுறித்து அவிநாசி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
நாப்கின் எரியூட்டும் இயந்திரம் வழங்கல்
நாமக்கல், ஆக.14- பள்ளிபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு தனியார் அமைப்பு சார்பில், நாப்கின் எரியூட்டும் இயந்திரம் வழங்கப்பட்டது. கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா, பள்ளிபாளையம் ஆவரங்காடு கிருஷ்ணவேணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது. இதில், சேர்மன் மோ.செல்வராஜ், நகர்மன்ற தலைவர் ப.பால முருகன், தலைமை ஆசிரியர் சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, மாணவிகள் பயன்பெறும் வகை யில் நாப்கின் எரியூட்டும் இயந்திரத்தை, தனியார் ரோட்டரி கிளப் மூலம் வழங்கினர். இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.
உழவர் சந்தையில் கடை ஒதுக்க கோரிக்கை
கோவை, ஆக.14- ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு உரிய கடை ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை எனவும், உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சி யரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கோவை ஆர்எஸ்புரம் உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு உரிய கடை ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. எம்ஜிஆர் மார்க்கெட், பூளுவப்பட்டி மார்க்கெட், தொண்டாமுத்தூர் மார்க்கெட் ஆகிய மார்க்கெட்டுகளில் இருந்து காய்கறிகள் விலைக்கு வாங்கி அதிக அளவில் விற்பனை செய்யும் அட்டைதாரர்க ளுக்கு நிரந்தர கடை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது போன்று பல முறைகேடுகள் அங்கு நடக்கின்றன. விவசாயி கள் என்கிற போர்வையில் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக் கீடு செய்யப்படுகின்றன. விவசாயிகளுக்கு உடனடியாக கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும், என்றனர்.
நுழைவுப்பாலம் அமைத்து தர உறுதி
நாமக்கல், ஆக.14- பள்ளிபாளையம் – திருச்செங்கோடு சாலை உயர்மட்ட பாலத்தில் நுழைவுப்பாலம் அமைத்து தரப்படும் என அதி காரிகள் உறுதியளித்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சி பகுதி யில் திருச்செங்கோடு சாலை, ஈரோடு சாலையில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நெடுஞ்சாலைத்துறையினரால் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைக்கும், அர சுப்பள்ளிக்கும் செல்லும் வழியில் நுழைவுப்பாலம் அமைக்கக்கோரி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை மேற்பார்வை பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சம் பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், நுழை வுப்பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்ற தலைவர் மோ.செல்வராஜ், துணைத்தலைவர் ப.பாலமுருகன் ஆகியோரிடம் நெடுஞ்சாலைத்துறை அதி காரிகள் உறுதியளித்தனர்.
ரூ.1.60 கோடிக்கு மஞ்சள் ஏலம்
நாமக்கல், ஆக.14- நாமக்கல், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியா ளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இதில் விரலி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்து 200 முதல் ரூ.16 ஆயிரத்து 459 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.10,010 முதல் ரூ.15 ஆயிரத்து 509 வரையிலும், பனங்காளி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.11 ஆயிரத்து 152 முதல் ரூ.18 ஆ யித்து 139 வரையிலும் விலை போனது. மொத்தம் 1,900 மஞ்சள் மூட்டைகள் ரூ.1 கோடியே 60 லட்சத்துக்கு விற்பனையான தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.