ஈரோடு, நவ.29- பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டி லிருந்தும், வீடுகளில் அவ்வப்போது கழிவு நீர் தேங்குகிறதென ஈரோடு மாநகராட்சி ஆணையரிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் புகார ளித்தனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாநகராட்சிக ளில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பொழிவுறு நக ரம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல் லாத நிலையில், ஆன்லைனில் மக்கள் வாக் கெடுப்பு மூலம் பல்வேறு பணிகளுக்கு வாக் கெடுப்பு நடத்தப்பட்டு பணிகள் நடைபெறுவ தாகத் தெரிவிக்கப்பட்டது. இதன்ஒருபகுதி யாக ஈரோடு மாநகராட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு பாதாள சாக்கடை பணி தொடங்கப் பட்டது. மாநகரத்தின் 4 மண்டலங்களிலும் இப்பணிகள் நடைபெற்றன. வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றிற்கு பாதாள சாக்கடை இணைப்பு தருவதற்கு பணி ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர்கள் உரி மையாளர்களிடம் பல ஆயிரங்களை முறை கேடாக வசூலித்தனர். இதற்கான எந்த ரசீ தும் வழங்கவில்லை. இந்நடவடிக்கை பொது மக்களிடம் கடுமையான அதிருப்தியை ஏற் படுத்தியது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பாதாள சாக்கடை பணி களுக்கு பொதுமக்கள் ஒப்பந்ததாரருக்கு எவ்வித செலவு தொகையோ அல்லது மாதாந் திர உபயோகிப்பாளர் கட்டணமோ செலுத்த வேண்டியதில்லை என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை துண்டறிக்கையாக மாநக ராட்சி பகுதியில் பொதுமக்களிடம் விநியோ கிப்பது என்று முடிவானது. அதன்படி துண்ட றிக்கை தாயரானது. ஆனால், பொதுமக் களிடம் விநியோகிக்கப்படவில்லை. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாநக ராட்சியில் தவணை முறையில் தொகை செலுத்தி உரிய ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், புகார்களைத் தெரிவிக்க தொலைபேசி எண்களும் அறிவிப்பாக வெளி யிடப்பட்டது. அதேசமயம் ஒப்பந்ததாரர்களி டம் பணம் செலுத்தாத வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது மாநகராட்சி நிர் வாகம் பாதாள சாக்கடைக்கான வைப்புத் தொகை,
சாலை சீரமைப்பிற்கான கட்டணம், மேற்பார்வை செய்ததற்கான கட்டணம் என்று பல ஆயிரம் ரூபாய்கள் வீடு மற்றும் வணிக நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்று துண்டறிக்கை கொடுத்துள்ளது. மேலும், பாதாள சாக்கடை பயன்பாட்டு கட் டணத்தை அதிகரித்து பின் தேதியிட்டு அம லாக்கியது. இது உரிமையாளர்கள் அதிர்ச்சி யடைந்துள்ளனர். இந்நிலையில், ஒப்பந்த தாரர்கள் வைப்புத்தொகை, சீரமைப்பதற் கான கட்டணம், மேற்பார்வை செய்வதற் கான கட்டணம் பெற்றவர்களிடம் மீண்டும் வசூலிப்பதைக் கைவிட வேண்டும். எத்தனை இணைப்புகள் கொடுக்கப்பட்டதோ அதற் கான கட்டணத்தைத் தீர்மானிக்காமல், ஒன்றுக் கும் மேற்பட்ட கதவு எண்கள் இருந்தால் ஒவ் வொன்றிற்கும் தனித்தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை திரும்பப்பெற வேண்டும். இணைப்புகள் பெற்று பயன்பாட்டில் உள்ள வீடுகளில் கழிவு வெளியே செல்லா மல் அவ்வப்போது வீட்டிற்குள்ளேயே தேங் குகிறது. இதனை சரி செய்ய வரும் ஊழியர் கள் ரசீது எதுவும் கொடுக்காமல் பணம் வாங் கும் நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு தாலுகா செயலாளர் எம்.பாலசுப்பிரமணி யம் தலைமையில் மாநகராட்சி ஆணையாள ரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன், மாவட் டக்குழு உறுப்பினர் பா.லலிதா ஆகியோர் உடனிருந்தனர்.