திருப்பூர், செப். 29 – தமிழக அரசு தனியார் பேருந்துகளை வாடகைக்கு அமர்த்தி, தனியார்மய நடவ டிக்கைகளில் ஈடுபடுவதைக் கைவிட வலியு றுத்தி அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) ஆர்ப்பாட்டம் நடத்தியது. மாநிலம் தழுவிய முடிவின்படி திருப்பூர் காங்கேயம் சாலை அரசுப் போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளி ஓய்வுபெறும் நாளில், ஓய்வுக் கால பணப்பலன்களை வழங்க வேண்டும், 2019 செப்டம்பர் 1ஆம் தேதிக்குப் பின் ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு 14 ஆவது ஊதிய ஒப்பந்த பலன்களை வழங்க வேண்டும். பஞ்சப்படி நிலுவை தொகையை வழங்க வேண்டும். 14 ஆவது ஊதிய ஒப்பந் தப்படி தொழிலாளர்களுக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கவும், வேலை நிறுத்த நாட்களில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட வேண்டும். ஒப் பந்த அடிப்படையில் பணியாளர் நியமனம் செய்யும் திட்டத்தை கைவிட்டு, தேவையான பணியாளர்களை உடனடியாக பணி நியம னம் செய்ய வேண்டும். தமிழக அரசு தனியார் பேருந்துகளை வாடகைக்கு அமர்த்தும் தனி யார்மய நடவடிக்கைகளை கைவிட வேண் டும். அரசு போக்குவரத்து கழகத்தில் ஏற்பட் டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க வரவுக் கும், செலவுக்கும் இடைப்பட்ட தொகையை அரசு நிதி ஒதுக்கி பொது போக்குவரத்து சேவையை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முழங்கி இந்த ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.
சிஐடியு மண்டலத் தலைவர் எம்.கந்தசாமி தலைமையில், கோரிக்கைகளை விளக்கி ஓய்வு பெற்ற நல அமைப்பின் நிர்வாகி பழ னிச்சாமி, சிஐடியு மண்டலப் பொதுச் செயலா ளர் பி.செல்லத்துரை, துணைப் பொதுச் செய லாளர் கே.கொங்குராஜ், வி.விஸ்வநாதன் ஆகியோர் உரையாற்றினர். சிஐடியு சங்கத்தி னருடன், ஓய்வுபெற்றோர் நல அமைப்பின ரும் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர். காங்கேயம் காங்கேயம் அரசுப் பேருந்து பணிமனை முன்பாக வியாழக்கிழமை பிற்பகல் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஓய்வு பெற் றோர் நல அமைப்பின் காங்கேயம் கிளைத் தலைவர் பி.முத்தப்பன் தலைமை வகித்தார். சிஐடியு காங்கேயம் கிளைச் செயலாளர் எஸ். அசோக்குமார், மண்டல உதவித் தலைவர் என்.நடராஜ், ஓய்வு பெற்றோர் நல அமைப் பின் கே.தண்டபாணி, ஓய்வு பெற்றோர் அமைப்பின் மண்டலப் பொருளாளர் ஆர்.நாச்சிமுத்து உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். சிஐடியு காங்கேயம் கிளைப் பொருளாளர் ஆர்.காளிராஜ் நன்றி கூறி னார்.