districts

img

இலவச கழிப்பிட வளாகத்தை கட்டணக் கழிப்பிடமாக மாற்றாதே வாலிபர், மாதர் சங்கத்தினர் முறையீடு

தருமபுரி, மே 30- இலவச கழிப்பிட வளாகத்தை கட்டணக் கழிப்பிடமாக மாற்றும் முடிவைக் கைவிட  வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பாப்பாரப்பட்டி பேரூ ராட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட் டது. பாப்பாரப்பட்டி வாரச்சந்தை வளாகத் தில் உள்ள இலவச கழிப்பிட வளாகத்தை கட்டண கழிப்பிடமாக மாற்றும் முடிவைக் கைவிட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தலைமையில் 7, 8,  9, 11 ஆம் வார்டுகளைச் சேர்ந்த பொது மக்கள் திரண்டு வந்து பேரூராட்சித் தலை வரிடம் மனு கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து மனுவைப் பெற்றுக் கொண்டு பேரூராட்சி மன்றத் தலைவர்  பிருந்தா,  இலவச கழிப்பிட வளாகத்தை கட்டணக் கழிப்பிடமாக மாற்றும் முடிவைக் கைவிடப் போவதாகத் தெரிவித்தார். மேலும், தெலுங்கர் தெருவாசிகள் பயன்படுத்தி வந்த  கழிப்பிட வளாகத்தை சீரமைத்துத் தருவ தாகவும் வாக்குறுதி அளித்தார். இந்நிகழ்வில், இந்திய ஜனநாயக வாலி பர் சங்க பாப்பாரப்பட்டி பகுதி செயலா ளர் கே.லோகநாதன், மாவட்ட பொருளா ளர் மு.சிலம்பரசன், அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்க மாவட்ட பொருளாளர் பி.ராஜாமணி மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர் வே.விசுவநாதன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சின்ன சாமி, கிளை செயலாளர் எஸ். ராஜசேகர் உள்ளிட்டு பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.