கோவை, ஜூன் 22- இந்தியர்கள் புனிதமாக கருதும் ராணு வத்துறையை சீர்குலைக்காதே, அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒன்றிய மோடி அரசை கண் டித்து கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மார்க் சிஸ்ட் கட்சி, சிஐடியு, இந்திய மாணவர் சங் கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஆவேச போராட்டத் தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பல்வேறு இடங்களில் மாணவர், வாலிபர் சங்கத்தினர் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு கைதாகினர். இந்திய ராணுவத்தில் ஒப்பந்த முறை யில் ஆட்களை தேர்வு செய்யும் மிக மோச மான திட்டத்தை ஒன்றிய பாசிச பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இளை ஞர்கள், மாணவர்கள் ஆவேச போராட்டங் களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய நாட் டின் பாதுகாப்பையும், இளைஞர்களின் வேலைவாய்ப்பையும் கேள்விக்குறியாக் கும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரயில்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. பாஜக அலுவலகங்களுக்கு தீவைக்கப்பட் டது. வடமாநிலங்களில் கொந்தளிப்பான சூழல் நிலவுவதால் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித் துள்ளது.
இதன்தொடர்ச்சியாக தமிழகத்திலும் இப்போராட்டங்கள் வலுப்பெற்று வரு கிறது. இதன்ஒருபகுதியாக தமிழகம் தழு விய ரயில் மறியல் போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கம் அறைகூவல் விடுத்திருந் தது. இதன்படி, புதனன்று கோவை ரயில் நிலையத்தில் நாகர்கோவில் செல்லும் ரயிலை மறித்து இந்திய மாணவர் சங்கத்தி னர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாணவர் சங்க மாநில துணை செயலாளர் நிருபன் சக்கரவர்த்தி, மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா, மாவட்ட தலைவர் அசாரு தீன், மாவட்ட நிர்வாகிகள் கயல்விழி, மது உட்பட ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக போராட்டத்தில் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை யடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் களை காவல் துறையினர் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். சேலம் சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தில் மறி யல் போராட்டத்திற்கு சென்ற இந்திய மாண வர் சங்கத்தினரை நுழைவாயில் முன்பு காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். முன்னதாக, சூரமங்கலம் உழ வர் சந்தை முதல் பேரணியாக வந்த இந்திய மாணவர் சங்கத்தினர் ஒன்றிய மோடி அர சின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரி வித்து ஆவேச முழக்கங்களை எழுப்பி னர். இப்போராட்டத்தில் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாவட்ட தலைவர் எஸ்.பவித் திரன், மாவட்ட நிர்வாகி அருண் உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்ட னர்.
நாமக்கல்
நாமக்கல் பூங்கா சாலையில் முன்பு இந் திய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தேன் மொழி தலைமை தாங்கினார். மாவட்ட செய லாளர் சரவணன், ராசிபுரம் ஒன்றிய தலைவர் தங்கராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் கோகுல் உள்ளிட்டோர் பங்கேற்று முழக் கங்களை எழுப்பினர்.
வாலிபர் சங்கம்
அக்னி பாத் திட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத் தில் ஈடுபட்டனர். வாலிபர் சங்க கோவை மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ், மாவட்ட தலைவர் ஸ்டாலின் குமார் உள் ளிட்ட வாலிபர் சங்க நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்ன தாக, இப்போராட்டத்தின் போது போராட் டகாரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மார்க்சிஸ்ட் கட்சி
இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக் கும் அக்னிபாத்திட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி, ஈரோடு, சத்தி பழைய பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சத்தி நகர கிளை செயலாளர் பி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் தாலுக்கா செயலாளர் கே.எம்.விஜய குமார் பேசினார். இதில், திருத்தணிகாசலம், சத்தியமூர்த்தி, பி.கணேஷ், பொன்னுசாமி, ராம்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஈரோடு
பெருந்துறை புதிய பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தாலுக்கா செயலாளர் பி.முத்துபழனிசாமி தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்டசெயற்குழு உறுப்பினர் சி.பரமசிவம், தாலுக்கா கமிட்டி உறுப்பினர் கே.ரவி, என்.பாலசுப்பிரமணி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். அந்தியூர் அரசு மருத்துவமனை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுக்கா கமிட்டி உறுப்பினர் எஸ்.செபாஸ்டியன் தலைமை வகித்தார். தாலுக்கா கமிட்டி செய லாளர் ஆர்.முருகேசன் மற்றும் தாலுக்கா குழு உறுப்பினர் ஏ.கே.பழனிசாமி ஆகி யோர் கண்டன உரையாற்றினர்.
தருமபுரி
தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்ட செயலாளர் ஏ.குமார் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் டி.ரவீந் திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, எம்.முத்து, சி.நாகராசன், எஸ்.கிரைஸாமேரி, வே.விசுவநாதன், ஆர்.சின்னசாமி, ஆர்.மல்லிகா, ரவி, தருமபுரி நகர செயலாளர் ஆர்.ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர்கள் தருமபுரி என்.கந்தசாமி, நல்லம்பள்ளி எஸ்.எஸ்.சின்னராஜ், அரூர் பி.குமார், பாப்பிரெட்டிப்பட்டி தனுசன், இண்டூர் பிரகாசம், சின்னம்பள்ளி சக்திவேல் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டு திரளானோர் பங்கேற்றனர்.
சிஐடியு ஆர்ப்பாட்டம்
அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியு றுத்தி நாமக்கல் பூங்கா சாலை முன்பு சிஐ டியுவினர் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். சிஐ டியு மாவட்ட உதவிசெயலாளர் சு.சுரேஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், மாவட்டச் செயலாளர் ந.வேலுசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி ஆகி யோர் கண்டன உரையாற்றினர். இதில், சிஐ டியு மாவட்ட உதவிச் செயலாளர் கு.சிவ ராஜ், மாவட்ட உதவித் தலைவர் கே.ஜெய ராமன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர். சேலத்தில் இரயில்வே கூட்செட் முன்பு சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள் சார் பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாநில பொதுச்செயலாளர் ஆர்.வெங்க டபதி தலைமை தாங்கினார். இதில், சிஐடியு மாவட்ட செயலாளர் டி.உதயகுமார் மாவட்ட தலைவர் பொ.பன்னீர்செல்வம், சுமைப் பணி சங்க மாவட்ட செயலாளர் ஏ.கோவிந் தன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட சங்க நிர்வாகி கள் மற்றும் ஏராளமான சுமைப்பணி தொழி லாளர்கள் பங்கேற்றனர்.