அங்கன்வாடி மையத்தை மாற்றாதீர்
நாமக்கல், பிப்.21- அங்கன்வாடி மையத்தை வேறு இடத்திற்கு மாற்றும் நடவ டிக்கைக்கு எருமபட்டி ஒன்றிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங்கிடம் அளித்த மனுவில், மேதரமாதேவி மாரியம்மன் கோயில் அரு கில் உள்ள, அங்கன்வாடி மையம் கடந்த 40 ஆண்டு காலமாக இயங்கி வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தை வேறு இடத்திற்கு மாற்றும் முயற்சியை மாவட்ட நிர்வாகமும், துறை அலுவலர்களும் மேற்கொண்டு வருவதாக தெரிய வரு கிறது. ஆனால், இந்த அங்கன்வாடி மையம் மேதரமாதேவி யின் மையப் பகுதியில் உள்ளது. குழந்தைகள் நலன் கருதி பொதுமக்கள் குழந்தைகளை அழைத்து வரவும், சௌரிய மான இடமாக இருக்கிறது. எனவே, அதே இடத்தில் குழந்தை கள் நலனுக்கான வசதிகளுடன் அதே இடத்தை புதுப்பித்து தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
யூடியூப் விளம்பரத்தின் மூலம் நூதன மோசடி
கோவை, பிப்.21- கோவையில் யூடியூப் விளம்பரத்தை பார்த்து தங்கத்தில் முதலீடு செய்தவரிடம் ரூ.5.50 லட்சம் நூதன மோசடி நடை பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை, உக்கடத்தை சேர்ந்தவர் கருணாகரன் (48). இவர் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித் தார். அதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு யூடியூப் சேன லில் ஒளிபரப்பான விளம்பரத்தை பார்த்தேன். அதில், தங்கம் மற்றும் ஆயிலில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பி நான் அதில் உள்ள லிங்கை கிளிக் செய்தேன். பின்னர், அதனுடன் தொடர்புடைய வாட்ஸ் ஆப் குரூப்பில் நான் இணைக்கப்பட்டேன். 2 நாட்கள் முதல் 360 நாட்கள் வரை தங்கம் மற்றும் ஆயிலில் முதலீடு செய்யலாம் எனவும், தொகைக்கு ஏற்ப 5.4 சதவீதம் வட்டி தரப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, தங்கத்தில் முதலீடு செய்ய விரும் பிய நான் தனது வங்கி கணக்கு விவரங்களை பதிவிட் டேன். முதற்கட்டமாக எனது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 512 பணம் எடுக்கப்பட்டது. அதன்பின்ன ரும் படிப்படியாக எனது வங்கி கணக்கில் இருந்து மொத்தம் ரூ.5.50 லட்சம் பணம் எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சிய டைந்த நான் அந்த பணத்தை மீண்டும் தனது வங்கி கணக்கில் வரவு வைக்க முயன்றேன். ஆனால் முடியவில்லை. சிறிது நேரத்தில் நான் வாட்ஸ் ஆப் குரூப்பில் இருந்து வெளியேற் றப்பட்டேன். பின்னர் அந்த லிங்க்கில் உள்ளே நுழைய முடிய வில்லை. யூடியூப்பில் விளம்பரம் செய்து போலியான லிங்க் அனுப் பியும், வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைத்தும் என்னிடம் இருந்து ரூ.5.50 லட்சம் நூதன முறையில் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. எனவே அந்த அடையாளம் தெரியாத நபர் கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.