அதிமுக மாநாட்டில் கனிமொழி குறித்து அவதூறு திமுக மகளிர் அணியினர் காவல்துறையில் புகார்
திருப்பூர், ஆக. 24 - அதிமுக மாநாட்டில் திமுக நிர்வாகிகளை அவதூறாக பாடிய நபர் மீதும், மாநாடு நடத்திய நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக மகளிர் அணியினர் திருப்பூர், கோவை ஆகிய இடங்களில் காவல்துறையினர் புகார் அளித்தனர். அதிமுக சார்பில் கடந்த ஞாயிறன்று மதுரையில் பொன் விழா மாநாடு நடைபெற்றது. இதில் அதிமுகவின் முன்னாள் முதலமைச்சரும் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச் சாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பி னர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் திமுகவின் துணை பொதுச்செயலாளர் கனி மொழி மற்றும் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறாக பாடியதாகவும், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் ரசித்து கைதட்டி ரசித்ததாகவும், இது அதிமுகவின் தொலைக் காட்சியில் நேரலை செய்யப்பட்டிருந்ததாகவும், இது திமுக வினருக்கு மிகப் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி யுள்ளது. இந்த நிலையில் ஆபாசமாகவும், அருவருக் கத்தக்க வகையிலும் பாடிய நபர் மீதும், மாநாட்டை நடத்தி யவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி திமுகவின் தெற்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகி கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதேபோன்று கோவை மாநகர காவல் ஆணையரிடம் திமுக கோவை மாநகர் மாவட்ட மகளிர் அணியினர் அதிமுக வினர் மீது புகார் அளித்தனர்.
நிலவில் சந்திராயன் - பள்ளி மாணவர்கள் ஆர்ப்பரிப்பு
திருப்பூர், ஆக.24 - சந்திராயன் 3 விண்கலம் நிலவின் தென் துருவ பகுதியில் தரை இறங்கும் நிகழ்வை திருப்பூரில் மாணவர்கள் நேரலையில் உற் சாகமாக கண்டு களித்து மகிழ்ச்சியடைந் தனர். திருப்பூர் குமார் நகர் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு நேரடி யாக ஒளிபரப்பி விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அறிவியல் இயக்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் சந்துரு முன்னி லையில் 9ஆவது முதல் 12 ஆம் வகுப்பு மாண வர்களுக்கு சந்திராயன் விண்கலம் குறித்த தகவல்களையும், விக்ரம் லேண்டர் எவ்வாறு தரை இறங்குகிறது என்பது பற்றி யும், லேண்டரின் பணிகளை பற்றியும் விளக்க படங்களுடனும் எளிமையாக எடுத்துரைக் கப்பட்டது. சரியாக மாலை 5.40 மணியளவில் மாண வர்களுக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து ஒளிபரப்பப்பட்ட நேரடி ஒளிபரப்பை மாணவர்கள் கண்டு களித் தனர். நிலவில் தரையிறங்கும் போது மாண வர்கள் உற்சாகமாக கைதட்டி கரகோஷம் எழுப்பினர் . இந்நிகழ்வை பள்ளி தலைமை ஆசிரியர் ஏற்பாடு செய்ய அறிவியல் ஆசிரியர்களின் உதவியுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் வி. ராமமூர்த்தி கலந்து கொண்டு மாணவர்களிடையே கலந்துரையாடி னார். அதேபோல், திருப்பூர் கே எஸ் சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சந்தி ராயன் 3 தரை இறங்கிய நேரடி காட்சிகளை மாணவர்கள் கண்டு ஆர்ப்பரித்தனர். நிலவில் தடம் பதிக்கும் சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தரை இறங்கி ஆய்வு செய்ய உள்ளதை திருப்பூர் கே எஸ் சி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நேரடியாக மாணவர்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த காட்சியை திரையில் கண்டு களித்தனர். தொடர்ந்து வெற்றிகரமாக சந்திராயன் நிலவில் கால் பதித்ததை கண்ட மாண வர்கள் துள்ளி குதித்து தங்களது ஆரவா ரத்தை வெளிப்படுத்தினர்.
அடர் வனப்பகுதியில் தண்ணீர் தொட்டியில் யானை, சிறுத்தை நீர் பருகும் டிரோன் காட்சிகள்
உதகை, ஆக.24- கூடலூர் சேரம்பாடி பகுதியில் பசுமை யான அடர்வனப் பகுதி மத்தியில் வனத் துறையினரால் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியின் டிரோன் காட்சிகளை வனத் துறையினர் வெளியிட்டுள்ளனர். இதில், யானைகள் நீர் பருகுவதும், புலி, இருப்ப தையும் உறுதி செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் குறிப்பாக கூடலூர் பகுதிகளில் அதிக மனித விலங்கு மோதல் தொடர்ந்து வருகிறது. இதனால், மக்கள் அச் சத்துடனே வாழ்ந்து வருகின்றனர். இந்த மோதலை தடுக்க வனத்துறையினர் பல கட்ட முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு முயற்சியாக, சேரங்கோடு பகுதியில் வனவிலங்குகள் அதிகமாக பயன் படுத்தும் வழித்தடத்தில் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டியை உருவாக்கியுள்ளது. இது மட்டு மல்லாமல் தடுப்பணைகள், கசிவுநீர் தொட்டி கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு யானை கூட்டங்கள், தண்ணீர் பருகியதையும் நீர் நிலை அருகே புலி தென்பட்டதையும் வனத் துறையினர் உறுதி செய்துள்ளனர். இதன் மூலம் அதிகமாக குடிநீர் தேடி ஊருக்குள் நுழையும் யானைகள் தண்ணீர் தொட்டியிலேயே நீரை குடித்து ஊருக்குள் நுழையும் சம்பவங்கள் தடுக்கப்படும் நபார்டு திட்டம் மூலம் கடந்த 2022 ஆம் ஆண்டு மூன்று மாத கால பணி நடந்து முடிந்து இந்த தண்ணீர் தொட்டி வனவிலங்குகளின் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு பணிகள் நிறை வடைந்துள்ளது. இதன் மூலம் மனித விலங்கு மோதல் தடுக்கப்படுவதோடு வரும் காலங் களில் வனப்பகுதிகளில் அதிகமான இடங் களில் இது போன்ற தண்ணீர் தொட்டிகள் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வனத் துறையினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண் வழக்குரைஞர் தற்கொலை சிஐடியு போராட்ட எதிரொலி-3 பேர் கைது
அவிநாசி, ஆக.24 சிஐடியு கட்டிட கட்டுமான சங்கத்தின் போராட்டத்தையடுத்து அவிநாசியில் பெண் வழக்குரைஞர் தற்கொலை வழக்கில் தொடர் புடைய மாமனார், நாத்தனார், மருமகன் ஆகிய 3 பேரை போலீசார் புதனன்று இரவு கைது செய்தனர். அவிநாசி, செம்பியநல்லூர் ஊராட்சி முத்தம்மாள் நகரைச் சேர்ந்தவர் லட்சு மணன் மகள் சரண்யா (25), வழக்குரைஞர். இவருக்கு திருப்பூரைச் சேர்ந்த கட்டடப் பொறியாளர் சங்கர் என்பவருடன் கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்த சரண்யா, கடந்த ஜூலை மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும், சார் ஆட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. இதற்கிடையில், இவ் வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அவிநாசி சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியது. மேலும், ஆர்ப்பாட்டத் திலும் ஈடுபட முயற்சித்தனர். இதனைய டுத்து, வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விரைவில் கைது செய்வோம் என போலீசார் உறுதியளித்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் தொடர் புடைய சரண்யாவின் மாமனார் திருப்பூர் கூத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணி (65). இவரது மகள் கோபிசெட்டிபாளையம் அங்காளம்மன் நகரைச் சேர்ந்த லாவண்யா (26), இவரது கணவர் மௌலி சங்கர்(28) ஆகியோரை போலீசார் புதனன்று இரவு கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சரண்யாவின் கணவர் சங்கர் அவிநாசி நீதி மன்றத்தில் வியாழனன்று சரணடைந்தார்.
அனைத்து தொழில் அமைப்புகள் ஒன்றிணைய டீமா அழைப்பு
திருப்பூர், ஆக.24 - தமிழகத்தில் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சிறு, நடுத்தர தொழில்களையும் பாதுகாக்க அனைத்து தொழில் அமைப்புகளும் ஒன்றிணைய வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் எம்.பி. முத்துரத்தினம் கூறியுள்ளார். தமிழகத்தில் ஒட்டுமொத்த தொழில் அழிவிலிருந்து பாது காக்க வேண்டும் என்றால், அனைத்து தொழில் அமைப்பு களும் ஒன்றிணைய வேண்டும். இப்போதுள்ள உலகளாவிய பொருளாதார பின்னடைவு, உக்ரைன் ரஷ்யா போர், மக்களி டம் வாங்கும் தன்மை குறைந்துள்ள நிலை, ஆர்டர்கள் 30 சதவிகிதம் மட்டும் இயங்கும் நிலை, நிதி நெருக்கடி, வங்கிகள் போதுமான அளவு கடன் வழங்க முன் வருவதில்லை, தொழி லாளர்கள் பற்றாக்குறை, உற்பத்தி குறைவு, உற்பத்தி செலவு அதிகம் என நெருக்கடியில் அனைத்து தொழில்களும் உள் ளன. இந்த நெருக்கடியை உணராமல் தமிழக அரசும் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளார்கள். ஒட்டுமொத்த சிறு, குறு தொழில்கள் அழியும் நிலை உருவாகியுள்ளது. தொழில் துறையின் இந்த நிலையை தமிழக முதல்வருக்கு தெரியப் படுத்த வேண்டிய கட்டாயத்தில் உற்பத்தியாளர்கள் உள்ள னர். அதன் அடிப்படையில் திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள அனைத்து தொழில் துறைகளும் ஒன்றிணைந்து நிரந்தர முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் ஆக.25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி அளவில் கோயம்புத்தூர் கோகுலம் பார்க் ஹோட்டல் ஆக்ஸ்போர்ட் அரங்கில் கலந்தாலோசனைக் கூட்டம் நடை பெறுகிறது. இக்கூட்டத்தில் அனைத்து சிறு, குறு, நடுத்தர தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்குமாறு திருப் பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் டீமா தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கூறியுள்ளார்.
சுமைப்பணி சங்க நிர்வாகிகள் தேர்வு
நாமக்கல், ஆக.24- நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ். சிஐடியு அலுவலகத்தில், சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்க மகாசபை கூட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.வேலுச்சாமி துவக்க உரையாற்றினார். மாவட்ட துணைச்செயலாளர் கே.மோகன் வாழ்த்துரை வழங்கினார். இதைத்தொடர்ந்து சங்கத்தின் கடைச்சநல்லூர் கௌரவத் தலைவராக லட்சுமணன், தலைவராக அலாவு தீன், செயலாளராக கார்த்தி, பொருளாளராக சரவணன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். சிஐடியு மாவட்டத் தலை வர் எம்.அசோகன் நிறைவுரையாற்றினார். இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
தொலைவிலிருந்து நோயாளிகளின் இதய துடிப்பை கண்காணிக்க புதிய கருவி: மருத்துவர்கள் அசத்தல்
கோவை, ஆக.24- மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரி வில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை பல கிலோ மீட்டர் தூரத்திலிருந்து கண்கா ணிக்கும் வகையில், ‘கோட் ப்ளு’ எனும் புதிய கருவியை கோவையில் மருத்துவர்கள் செல் படுத்தி அசத்தி வருகின்றனர். மருத்துவமனையில் இருதய நோயாளி கள், உயர் அறுவை சிகிச்சை நோயாளிகள் என தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருவார்கள். இவர் களை மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண் காணிப்பது மிகவும் அவசியமாகிறது. அதே போல மருத்துவர்கள் நோயாளிகளின் அரு கிலே அமர்ந்து கண்காணிப்பது என்பது கடின மான ஒன்றாகும். இந்நிலையில், கோவை மாவட்டம், ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஜெம் தனியார் மருத்துவமனையில் நோயா ளிகளை 24 மணி நேரமும் கண்காணிக்கும் விதமாக ‘கோட் ப்ளு’ எனும் புதிய கருவியை மருத்துவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த சிப் பயோசென்சார் கருவியை நோயா ளிகளின் உடலில் பொருத்தி செல்போன் செயலி மூலம் இதயத்துடிப்பை கண்டுபிடிப்ப துடன் நோயாளிகளின் மோசமான நிலையை முன்கூட்டியே மருத்துவர்களுக்கு மெசேஜ் தரக்கூடிய வகையில் ரிமோட் மானிட்டரி சிஸ்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல கிலோ மீட்டர் தூரத்திலிருந்து நோயாளிகளை கண்காணித்து வருவதுடன் மருத்துவமனையிலும் ஒரே இடத்தில் 100 பேரை கண்காணிக்கும் வைரலஸ் கமாண்ட் சென்டர் அமைக்கப்பட்டு மருத்துவர்கள் குழு கண்காணித்து அசத்தி வருகின்றனர்.
தக்காளியை அடுத்து வெங்காயம் விலை உயர்வு
கோவை, ஆக.24- கோவையில் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன வெங்காயம் தற் போது, 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக தக்காளி விலை ரூ.100 கடந்து, மக்களை பெரும் அவதிக்குள் ளாக்கியது. தற்போது தக்காளி கிலோ விற்கு ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்டு வரு கிறது. இதனால் மக்கள் பெருமூச்சு விடும் நேரத்தில், வெங்காயம் விலை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. கோவையை பொறுத்த வரையில் சின்ன வெங்காயம் ஆலந்துரை, பூண்டி, சிறுவாணி, கிணத்துக்கடவு உள் ளிட்ட பகுதிகளில் இருந்தும், நாசிக், பூனே உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சந்தை களுக்கு வருகிறது. இதேபோல் பெரிய வெங் காயம் மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங் களில் இருந்து விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. கோவையில் கடந்த மாதம் சின்ன வெங்காயமும், பெரிய வெங்காயமும் 15 ரூபாய் முதல் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இவற்றின் விலை மெல்ல மெல்ல அதிகரித்து, ஒரு கிலோ சின்ன வெங்காயம் 45 முதல் 50 ரூபாய் வரை விலை விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம் விலை 25 முதல் 35 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. உள்ளூர் வரத்து குறைவு மற்றும் வடமாநிலங்களில் மழை காரணமாக விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். இதனிடையே தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக வெங்காய பதுக்கலைத் தடுக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.