திருப்பூர், ஜூலை 27- ஒன்றிய அரசு தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் தமிழகத்திற்கு உரிய நிதி ஒதுக்காமல் வஞ்சித்த மோடி அரசை கண்டித்து திராவிட முன் னேற்றக் கழகத்தின் சார்பில் திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் ரயில் நிலையம் அருகில் சனியன்று நடைபெற்ற திமுக ஆர்ப்பாட் டத்திற்கு, கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. க.செல்வராஜ் தலைமை வகித்தார். இதில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, வடக்கு மாந கரச் செயலாளர், மாநகர மேயருமான ந. தினேஷ்குமார், தெற்கு மாநகரச் செய லாளர் டி.கே.டி. மு.நாகராஜ் உள்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்ட னர். பெருந்திரளான பெண்கள் உட்பட திமுகவினர் பங்கேற்று ஒன்றிய அரசை கண்டித்து முழக்கம் எழுப்பினர். தாராபுரம்: அதேபோல, ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பாஜக அரசை கண்டித்து திருப் பூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் தாரா புரம் அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர், மாநகராட்சி மண்டலத் தலை வர் இல.பத்மநாபன் தலைமை ஏற்றார். திமுகவினர் பெருந்திரளாக பங்கேற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் திமுக செயலாளர்கள் மற் றும் பலர் கலந்து கொண்டனர்.