கோவை, மார்ச் 30- பாஜக-வின் பினாமி கட்சிதான் அதிமுக, அந்த கட்சிக்கு போடு கின்ற ஓட்டு நோட்டாவுக்கு சமம் என கோவை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் குற்றம்சாட்டினார். கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ் குமார் உதய சூரியன் சின்னத்தில் ஓட்டு கேட்டு தீவிர வாக்குசேகரிப் பில் ஈடுபட்டு வருகிறார். இவர் சனி யன்று சூலூர் ஒன்றியப் பகுதிகளான குளத்தூர், வெங்கிடாபுரம், சின்னி யம்பாளையம், கரையாம்பாளை யம், நீலாம்பூர், முதலிபாளையம், அரசூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வாக்காளர்கள் மத்தி யில் பேசிய வேட்பாளர், திமுக ஆட்சியில் மகளிருக்கு உரிமை தொகை, பேருந்தில் இலவச பய ணம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் சொன்ன திட்டங்க ளையும், சொல்லாத திட்டங்களை யும் செய்து வருகிறார். திமுக அரசு என்றுமே பெண்களுக்கு ஆதரவாக உள்ளது. ஆனால் மணிப்பூரில் பெண்கள் நடமாட முடியாத நிலையை உருவாக்கியது பாஜக அரசு. அவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திலும் இதே நிலைதான் ஏற்படும். பெட்ரோல் விலை குறைக் கப்படும் எனவும், ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ. 15 லட்சம் போடப்படும் எனவும் பல்வேறு வாக்குறுதிகளை பாஜக அளித் தது. ஆனால் அவர்கள் சொன்ன தில் ஒன்றை கூட நிறைவேற்ற வில்லை. கோவை விமான நிலையம் விரி வாக்கத்துக்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். விரிவாக் கம் செய்தால் நிறைய தொழிற்சா லைகள் வரும், அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆனால் இதனை பற்றியெல்லாம் பாஜக கண்டு கொள்வதில்லை. அம்பானி வீட்டு திருமணத்திற்காக 10 நாளில் சர்வதேச விமான நிலை யம் அங்கீகாரம் கொடுத்து விரி வாக்கம் செய்யப்பட்டது. அதிமுக- வின் பிரதம வேட்பாளர் யார்? என்று தெரியாமலேயே போட்டியி டுகின்றனர். பாஜகவை சமாதா னப்படுத்த தேர்தலில் நிற்கின்ற னர். பாஜக தமிழ்நாட்டில் நுழைய முடியாது. அதிமுக அமைச்சர்கள் கோடிக்கணக்கில் கொள்ளைய டித்து பாஜகவுக்கு பயந்து செயல் பட்டு கொண்டிருக்கின்றனர். பாஜக-வின் பினாமி கட்சிதான் அதிமுக. அந்த கட்சிக்கு போடு கின்ற ஓட்டு நோட்டாவுக்கு சமம். இந்த தேர்தலில் 40 தொகுதிகளி லும் இந்தியா கூட்டணிதான் வெல் லும் என்றார். பிரச்சாரத்தின்போது, தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், தேர்தல் பொறுப்பாளர் பா.அருண்குமார் Ex MLA, காங்கி ரஸ் விஎம்சி மனோகரன் , மக்கள் நீதிமையம் வரதராஜன், மார்க் சிஸ்ட் கட்சியின் தாலுகா உறுப் பினர்கள் ஸ்டாலின், பாலு, விடு தலை சிறுத்தைகள் கட்சி கோவை சம்பத், வழக்கறிஞர் துரை இளங்கோ, திராவிடர் தமிழர் கட்சி தனபால், திமுகழக ஒன்றியச் செயலாளர் அரசூர் அன்பரசு, துணைச்செயலாளர்கள் சீனிவா சன் மாவட்ட பொதுக்குழு ரகு, ஐடி விங் ரமேஷ், அறங்காவலர் குழு உறுப்பினர் சிபி செந்தில், சாமளா புரம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, அரசூர் பூபதி உள் ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி களின் நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.