இந்தியா கூட்டணியில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ. ராசாவுக்கு ஆதரவாக, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது என திருமுருகன்பூண்டி மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜ் தலை மையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுகவின் நகரச் செயலாளர் மூர்த்தி, நகர்மன்றத் தலைவர் குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, முன்னாள் ஒன்றியச் செயலா ளர் வெங்கடாசலம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிர மணியம், காமராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர மன்ற உறுப்பினர் சுப்பிரமணியம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.