கோவை, ஜூன் 19- தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் பொள்ளாச்சி கோட்டம் 8 ஆவது கோட்ட மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது. பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பேரணியுடன் துவங்கி, வங்கி ஊழியர் சங்க கட்டத்தில் கோட்ட மாநாடு நடைபெற்றது. கோட்டத் தலைவர் எம்.வெற்றிவேல் தலைமை ஏற்றார். துணைத் தலைவர் எம்.வீரமுத்து வரவேற்றார். மாநாட்டை துவக்கிவைத்து சங்கத்தின் மாநில தலைவர் மா.பால சுப்ரமணியம் உரையாற்றினார். மாவட்ட செயலாளர் எஸ்.ஜெகநாதன் வேலை அறிக்கையும், பொருளாளர் சின்ன மாரி முத்து வரவு செலவு அறிக்கையும் முன்வைத்தனர். இதில், சாலை பணியாளர்களுக்கு 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவித்து ஊதியம் வழங்கிட வேண்டும். தொழில் நுட்பக் கல்வி இல்லாத ஊழியருக்கான ஊதிய மாற்றம் 20 ஆயிரத்து 200 ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டை வாழ்த்தி சகோதர சங்கங்களின் நிர்வாகிகள் உரையாற்றினர். மாநாட்டின் நிறைவாக, நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், தலைவராக வெற்றிவேல், செய லாளராக ஜெகநாதன், பொருளாளராக வி.சின்ன மாரிமுத்து உள்ளிட்ட ஒன்பது பேர் கொண்ட நிர்வாக குழு தேர்வு செய்யய் பட்டது. மாநாட்டை நிறைவு செய்து சங்கத்தின் மாநிலச் செய லாளர் ஆ.அம்சராஜ் உரையாற்றினார்.