சேலம், ஜன.29- சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டு, தங்களது திற மைகளை வெளிப்படுத் தினர். ராகுல் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு அமைப்பு, மாவீரன் நேதாஜி சிலம் பம் பயிற்சி கூடம் இணைந்து 4 ஆவது மாவட்ட அளவிலான ஆடவர் மற்றும் மகளிருக்கான சிலம்பாட்ட போட்டி சேலம், உடையாபட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் ராகுல் விளையாட்டு இளைஞர் நலன் மேம்பாட்டு அமைப்பின் தேசிய தலை வர் மு.விஜயலக்ஷ்மன் பங்கேற்று போட் டியை துவக்கி வைத்தார். சிலம்பப் போட்டியின் முதன்மை பயிற்சியாளர் பெ.பா.சொக்கலிங்கம் வழி நடத்தினார். இதில், கீழ் இளையோர், இளையோர், மூத்தோர் மேல் மூத்தோர் என்ற பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றது. இதில், 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். குறிப்பாக 75 வயது முதியவர்கள் பங் கேற்று சிலம்பம் விளையாடினார். இந் நிகழ்ச்சியில் மாவீரன் நேதாஜி சிலம்ப மாநில நடுவர் டி.இ.இளங்கோவன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.