கோவை, ஜுலை 20- செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்ட்டில் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் புகைப்படம் எடுத் துக் கொண்டனர். 44 ஆவது சர்வதேச ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 ஆம் தேதி மாமல்லபுரத்தில் துவங்குகிறது. கோவை மாவட்டத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவது குறித்த பல்வேறு விளம்பர ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் உலக செஸ் கொண்டாட்டம் கோவையில் முன் னோட்டம் என்ற தலைப்பில் புகைப்படம் எடுக்கும் பாயிண்ட்/ செல்பி பாயிண்ட் தற்பொழுது வைக்கப்பட்டுள்ளது. இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் புகைப்படம் எடுத் துக் கொண்டார். அதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், மற்றும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அனைவரும் புகைப் படம் எடுத்துக்கொண்டனர்.