கோவை, ஜூன் 3- கோவை, புலியகுளம் மசால் லே-அவுட் பகுதியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆய்வு மேற்கொண்டார். புலியகுளம் மசால் லே-அவுட் பகுதியில் அதிகளவு தூய்மை பணியாளர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் வசிக்கும் இப்பகுதி குடியிருப்புகளுக்கு, நகர்ப்புற வாழ்விட மேம் பாட்டு வாரியம் மூலமாக இந்த இடத்தை வகைமாற்றம் செய்ய வேண்டும். அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டி தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதன்தொடர்ச்சியாக, கடந்த சில நாட் களுக்கு முன்பு பி.ஆர்.நடராஜன் எம்பி., ஆட்சியரை நேரில் சந்தித்து வலியுறுத்தி யிருந்தார். இதன்தொடர்ச்சியாக, புலியகுளம், மசால் லே-அவுட்டில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் ஆய்வு மேற் கொண்டார். அப்போது, மசால் லே-அவுட் பகுதி பொதுமக்கள் அடுக்குமாடி குடியிருப்பு கள் கட்டி தரப்படும் என்றார். இந்த ஆய்வின்போது, மத்திய மண்டல துணை ஆணையாளர் மகேஷ் கனகராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் மரு ஷர்மிளா, உதவி செயற்பொறியாளர் திட்டம் (ஏடிபிஓ) சத்யா, நில அளவை அலுவலர் (சர்வேயர்) ஆர்.சுரேந்திரன் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலைவர் யு.கே.சிவஞானம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு நகர குழு செயலாளர் என். செல்வராஜ், நகரக்குழு உறுப்பினர் த.நாக ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.