districts

அனுமதியின்றி விளம்பர பலகை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

கோவை, ஜுன் 2- கோவை மாவட்டத்தில் அனு மதியின்றி விளம்பர பலகைகள்  அமைக்கும் போது சம்பந்தப் பட்ட நிலத்தின் உரிமையாளர்  மற்றும் விளம்பர நிறுவனத்தின்  மீது நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என கோவை மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.  சமீபத்தில் கோவை, கருமத்தம் பட்டியில் விளம்பர பலகை அமைக்கும் போது ஏற்பட்ட விபத் தில் மூவர் சம்பவ இடத்திலே பலி யாகினர்.  இது குறித்து மாவட்ட நிர் வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவையில் உள்ள தேசிய நெடுஞ் ஞ்சாலை சாலைகள், மாநில நெடுஞ்சாலை சாலைகள், மாநக ராட்சி சாலைகள், உள்ளாட்சி அமைப்புக்கு சொந்தமான சாலை கள், நடைபாதைகள் ஆகிய இடங் களில் அனுமதியின்றி வைக்கப் படும் விளம்பரப் பலகைகள், டிஜிட்டல் பேனர்கள்,

பிளக்ஸ் போர்டுகள், கொடிக்கம்பங்கள் ஆகியவற்றை அகற்றப்படும். இது  தொடர்பாக அனைத்து உள்ளாட்சி  அமைப்புகளுக்கும் அறிவுறுத்தப் பட்டன. இதனால், கடந்த ஒரு மாதத்தில் சுமார் 185 விளம்பர பல கைகள் அகற்றப்பட்டுள்ளது. விளம்பர பலகைகளை ஊராட்சி பகுதிகளில் அமைப்பதற்கு அரசு  வழிமுறைகளின் படி, மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பித்து உரிய அனுமதி பெறப்பட வேண் டும். விளம்பர பலகைகளை பேரூ ராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் அமைப்பதற்கு சம் பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு களிடமிருந்தும் காவல்துறையினர் பரிந்துரையின்படியும் அனுமதி பெற்று இருக்க வேண்டும்.  கோவை மாவட்டத்தில் அனு மதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை உள் ளாட்சி அமைப்பினர் மற்றும் காவல்  துறையினர் இணைந்து அகற்று வதற்கு தனிக்குழு அமைத்து நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. குறிப்பாக, தெக்கலூர்- நீலம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள  அனுமதியற்ற விளம்பர பலகை களை உடனடியாக அகற்ற காவல் துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினர் மூலம்  துரித நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.  மேலும், கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பர பலகை கள் அமைக்கப்படும் பட்சத்தில் சம் பந்தப்பட்ட நிலத்தின் உரிமை யாளர் மற்றும் விளம்பர நிறுவ னத்தின் மீது தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட் டத்தின் கீழ் நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என குறிப்பிடப் பட்டுள்ளது.