districts

img

‘பெ.சண்முகத்திடம் தீக்கதிர் சந்தா வழங்கல்’

ஈரோடு மாவட்டம், விருமாண்டம்பாளையம் மற்றும் நசியனூர் பகுதியில்  சேர்க்கப்பட்ட தீக்கதிர் சந்தாக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகத்திடம் வழங்கப்பட்டது. நசியனூர் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் தாலுகா செயலாளர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் பா.லலிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.