தருமபுரி, ஜூலை 26- துணைபதிவாளரை பணி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தினர் புதனன்று ஒருநாள் தற் செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு துணை பதிவாளர் (வீட்டு வசதி) உமா தேவியை பணி நீக்கம் செய்ய வேண்டும். பால் கூட்டுறவு தணிக்கை மற்றும் வீட்டு வசதி துறையில் மூன்று வரு டங்களுக்கு மேல் பணி புரியும் ஊழியர்களை உடனே பணிவிடுவிப்பு செய்யவேண்டும். பால் கூட்டுறவு தணிக்கை துறையில் 5 வருடங்களுக்கு மேல் இயக்குநராக பணி புரியும் கூடுதல் பதிவாளர் பிரமிளாவை பணி யிட மாற்றம் செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மாவட்டம் முழு வதும் உள்ள கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் அலுவலகம் மற்றும் இணைப்பதி வாளர் அலுவலக ஊழியர்கள் அனைவரும் பங்கேற்றனர். இந்த போராட்டத்தால் அலுவ லகங்கள் வெறிச்சோடியிருந்தன.