அவிநாசி, நவ.15- அவிநாசி அருகே கருவலூரில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் திரவக் கழிவு மேலாண்மை பற்றி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அவிநாசி ஒன்றியம், கருவலூர் ஊராட்சியில் திரவக்கழிவு மேலாண்மை பற்றி கலந்துரையாடல் கூட்டம் தனியார் திரு மண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வீடு மற்றும் கடைகளில் பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்தக் கூடாது. திடக்கழிவுகளை பொது இடத்தில் மற்றும் குடிநீர் குழாய் மேல்நிலைத் தொட்டி உள்ளிட்ட இடங்களில் கொட்டக் கூடாது. பருப்பு, ரவை, பிஸ்கட் ஆகியவற்றின் பிளாஸ்டிக் கவர்களை வீடுகளிலேயே சேகரித்து வைத்து தூய்மை பணி யாளர்களிடம் வழங்க வேண்டும். திருமண மண்டபங்களிலி ருந்து உணவு கழிவுகளை வடிகால் பகுதிகளில் கொட்டக் கூடாது. ஊராட்சி பகுதியில் பொது இடங்களில் மலம் கழித் தால் உடனே அபராதம் விதிக்கப்படும் உள்ளிட்டவைகள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. இதில், துணை ஆட்சியர் ஜெய், திட்ட இயக்குநர் லட்சும ணன், உதவி திட்ட அலுவலர் சுமதி, செல்வராஜ், வட்டாட்சியர் ராஜேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன், ஒன்றிய கவுன்சிலர் சத்தியபாமா அவிநாசியப்பன்,ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ஊராட்சி செயலாளர் சிவராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் வணிகர்கள், உணவக உரிமை யாளர்கள், இறைச்சிக் கடையினர் ஆகியோர் பங்கேற்றனர்.