திருப்பூர், நவ.22 - திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மேற்கு மாவட் டங்களில் தொழில் நிலைமை தொடர் பாக சிறு, குறு தொழில் முனைவோர் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற் றது. திருப்பூர் தியாகி பழனிச்சாமி நிலை யத்தில் திங்களன்று நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் தலைமை ஏற் றார். இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் தற்போதைய அரசியல் சூழல், தொழில் நிலைமை கள் தொடர்பாக பேசினார். தற்போதைய சூழலில் சிறு, குறு தொழில்கள் சந்திக்கும் நெருக்கடிகள், பிரச்சனைகள் குறித்து தொழில் துறை யினர் தங்கள் அனுபவங்கள், கருத்து களை எடுத்துக் கூறினர். இதில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், சாட் டியா அமைப்பின் மாநில ஒருங்கிணைப் பாளர் கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டு இப்பிரச்சனைகள் தொடர் பாக மார்க்சிஸ்ட் கட்சி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து எடுத்து ரைத்தனர். இக்கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்க ளைச் சேர்ந்த சிறு, குறு தொழில் முனை வோர் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன் உட்பட 5 மாவட்டங் களைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி தலை வர்கள் கலந்து கொண்டனர்.