ஈரோடு, ஆக.19- மொடக்குறிச்சி அருகே கிராம ஊராட்சியில் பட்டியலினத்தைச் சேர்ந்த வார்டு உறுப்பினரிடம் பாகு பாட்டுடன் நடத்தப்படுவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம், மொடக் குறிச்சி வட்டத்திற்குட்பட்டது துய் யம்பூந்துறை கிராம ஊராட்சி. 9 வார்டுகளைக் கொண்ட இந்த ஊராட்சியில், 8 ஆவது வார்டு உறுப் பினராக பி.கோபாலகிருஷ்ணன் உள்ளார். பட்டியலினத்தைச் சேர்ந்த இவர், தன்னிடம் ஊராட்சி நிர்வாகம் சாதிய கண்ணோட்டத்து டன் பாகுபாடு காட்டுவதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதில், கடந்த சுதந்திர தினத் தன்று கிராம சபைக் கூட்டம் நடை பெற்றது. முறையாக விதி களைப் பின்பற்றாமல் நடத் தப்பட்டுள்ளது. 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமத்தில், நடத்தப்படும் கூட்டத் தில் 200பேர் வரை பங்கேற்க வேண் டும் என்ற விதி பின்பற்றப்பட வில்லை. 100 நாள் வேலையாட்களி டம் முதல்நாளே கையெழுத்து பெற் றுள்ளனர். சுழற்சி முறையில் கிராம சபைக் கூட்டம் அனைத்து பகுதிகளி லும் நடத்தப்பட வேண்டும். ஆனால், 20க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடந் திருந்தும் பட்டியலினத்தைச் சேர்ந்த எனது வார்டில் ஒருமுறை கூட கூட் டம் நடத்தப்படாமல் புறக்கணிக்கப் பட்டுள்ளது. ஊராட்சி மன்ற அலுவ லகத்திற்குள்ளே தன்னை அமரக் கூட அனுமதிப்பதில்லை. வெளியி லேயே நிறுத்தி பேசி அனுப்பி விடு கின்றனர். பலமுறை மனு அளித்தும், 8 ஆவது வார்டிற்கான அடிப்படை கோரிக்கைகள் மீது எந்த நடவடிக் கையும் இன்றி கிடப்பில் போடப்பட் டுள்ளது. மேலும் ஊராட்சி மன்றத் தலைவரும், செயலரும் ஒரே சமூ கத்தைச் சேர்ந்தவர்களாக ஆதிக்க மனநிலையில் உள்ளனர். இவ்வாறு முறையாக நடத்தாத கிராம சபைக் கூட்டத்தை ரத்து செய்து மறு கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.