districts

img

அன்னூரில் 900 ஆண்டுகள் பழமையான மூன்று நடுகற்கள் கண்டுபிடிப்பு

திருப்பூர், ஏப்.20-       கொங்கு மண்டலத்தில் மேற்குக் கடற்கரை யில் உள்ள கேரளத்தையும், கர்நாடகத்தையும் இணைக்கின்ற பெருவழியில் அன்னூர் அமைந் துள்ளது. பண்டைய நாளில் பொருள் வளம் கொழிக்கும் ஊராக விளங்கியது. இதைத்  திரு முருகன் பூண்டிக் கல்வெட்டிலுள்ள “மேற்ற லைத் தஞ்சாவூரான மன்னியூர் அடிக்கீழ்தளம்” என்ற வரி மூலம் அறிய முடிகிறது. மேலும் கி.பி.9  ஆம் நூற்றாண்டில் அன்னூர் மன்னியூர் என்றே அழைக்கப்பட்டு வந்ததையும் கல்வெட்டு மூலம்  அறிய முடிகிறது. ஏறத்தாழ 800 ஆண்டுகளுக்கு  முன்பே திருஞான சம்பந்தர் பெயரில் இங்கு ஒரு  மடமும் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளது. திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத் தைச் சேர்ந்த பொறியாளர் சு.ரவிக்குமார், க. பொன்னுசாமி ஆகியோர் அன்னூரில் கள ஆய்வு  செய்தனர். இதில் சுமார் 900 ஆண்டுகள் பழமை யான மூன்று நடுகற்களைக் கண்டறிந்துள்ளனர். அன்னூரில் இரண்டு நடுகற்கள் ஆயிரம் ஆண்டு கள் பழமையான கோவன்குளம் என்ற பிராட்டி  குளக்கரையிலும், மூன்றாவது நடுகல் மூன்று சாலைகளின் சந்திப்பிலும் கிடைத்துள்ளன. இது  ஒரு தனிச் சிறப்பாகும். இம்மூன்று நடுகற்க ளும் அன்னூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் அ.சவுந்தர்ராஜ் மற்றும் கே.ஆர்.சுந்தரம் ஆகி யோர் பேருதவியால் மீட்கப்பட்டு அன்னூர் தரும ராச கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.

தலைப்பலி நடுகல்:

அன்னூரில் 90 செ.மீ உயரமும், 40 செ.மீ  அகலமும் கொண்ட தலைப்பலி வீர நடுகல் கண்ட றியப்பட்டு உள்ளது. இதில் உள்ள மாவீரன் தன் இரு கைகளிலும் உள்ள இரு கத்தியால் தன்  தலையைத் தானே வீழ்த்தும் வண்ணம் உள்ளது.  தன் ஊர் மற்றும் மக்கள் நன்மைக்காக மாண்ட  மாவீரர் நினைவாக எடுக்கப்பட்ட நடுகற்கள் தலைப்பலி அல்லது நவகண்ட சிற்பங்கள் என்று  அழைக்கப்படுகின்றன.  பழந்தமிழகத்தில் வீரர்கள் எதிரிப்படையு டன் போர் தொடங்குவதற்கு முன்னர் போர் கட வுள் கொற்றவை முன்பு வேண்டிக் கொண்டு  வெற்றி கிடைத்த பின்பு தம் தலையை பலியாகக் கொடுப்பர். இந்த நிகழ்வை கலிங்கத்துப் பரணி  மிகவும் சிறப்பித்துப் போற்றியுள்ளது. அதே போல் தொற்று நோய்கள், எதிர்பாராத பஞ்சம், பெருவெள்ளத்தினால் குளம் ஏரிகள் உடைந்து  ஏற்படும் இயற்கைப் பேரழிவுகள் உண்டாகும் போது அவ்வூர் மாவீரர் பேரிடர் நீங்கி மக்கள் நல் வாழ்வு வாழ வேண்டிக் கொள்வர். இயற்கைப் பேரிடர் நீங்கிய பின் வீரர் தம் இன்னுயிரை காளி  முன்பு மாய்த்துக் கொள்வர். மேலும் கோயில்க ளில் நடைபெறும் தேர்த்திருவிழாவின் போது தேர் நகராமல் நிலை சேரத் தடைகள் நேரும் போது, தேர் நிலை அடைந்தால் தன்னை பலி கொடுப்பதாக அவ்வூர் மாவீரன்  வேண்டிக் கொள் வான். தேர்நிலை அடைந்ததும் தன் இன்னுயிரை மாய்த்துக் கொள்வான். இவைதான் தலைப்பலி  நடுகல் என்பதாகும்.

வில் வீரன் சிற்பம்:

80 செ.மீ. உயரமும், 40 செ.மீ. அகலமும் கொண்ட இந்த நடுகல்லில் உள்ள வீரமறவன் தன்  இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும்  பிடித்துப் போருக்குத் தயாராக உள்ளான். வீர னின் அள்ளி முடிந்த குடுமி இடது பக்கம்  சாய்ந்து மிகவும் அழகிய வேலைப்பாடுகளுடன் உள்ளது. தோள் வரை தொங்கும் காதுகளுடன், கழுத்தில் அணிகலன்களுடனும் காணப்படும் இம்மாவீரன் இடையில் கொசுவம் வைத்த இடை  ஆடையை அணிந்துள்ளான். இடுப்பில் குறுவா ளுடன் காணப்படும் இச்சிற்பம் தமிழக நடுகல் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகி றது. 

இருவீரர் சிற்பம்:

கொங்கு மண்டலத்தில் அரிதாகக் காணப்ப டும் வகையைச் சேர்ந்த இந்நடுகல் 95 செ.மீ. உயர மும், 45 செ.மீ. அகலமும் கொண்டது. இதிலுள்ள  மாவீரன் தனது வலது கையில் உள்ள வாள் மூலம் எதிரி வீரனின் வலது பக்கம் குத்தும் வகையிலும் தன் இடது கையில் வில் வைத்தபடியும் உள்ளார். பின்பக்கம் முடிந்துள்ள தன் குடுமியுடன் காட்சிய ளிக்கும் இவ்வீரன் இடையில் வரித்து கட்டிய ஆடையுடன் உள்ளார். இடுப்பில் குறுவாளும் காணப்படுகிறது. தாக்குதலுக்கு உள்ளான எதிரி வீரனும் தன் இரு கைகளிலும் அம்பு பிடித்தபடி  உள்ளார். இந்த நடுகற்களில் எழுத்துப் பொறிப்பு கள் இல்லை. சிலை அமைப்பை வைத்துப் பார்க் கும்போது இவை மூன்றும் கி.பி.12ஆம் நூற் றாண்டைச் சேர்ந்தவை ஆகும் என்று பொறியா ளர் சு.ரவிக்குமார் தெரிவித்தார்.