districts

img

நம்பியூர் சிவன் கோயில் வளாகத்தில் 600 ஆண்டுகள் பழைய புலிகுத்தி நடுகல் கண்டுபிடிப்பு

திருப்பூர், ஜன.19- நம்பியூர் சிவன் கோயில் வளா கத்தில் 600 ஆண்டுகள் பழைய  புலிகுத்தி நடுகல் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பண்டைய கொங்கு மண்டலத் தின் மையப்பகுதியில் பாய்ந்து செல்லும் காஞ்சி மாநதி என்னும் நொய்யல் ஆற்றை மையமாக வைத்து நாட்டு எல்லைகள் வகுக் கப் பெற்றன. அவற்றில் இடைக்கா லத்தில் மிகப்பெரிய நாடாக விளங் கியது வடபாரிசார நாடு. இந்த வட பாரிசார நாட்டில் பழம்பெருமை வாய்ந்த ஊர்களில், கொங்குப் பாண்டிய மன்னன் வீரபாண்டியன் காலக் கல்வெட்டுக்களில், “நம் பிப்பேரூர்” என்று அழைக்கப்ப டும் நம்பியூரும் ஒன்று. இங்குள்ள  800 ஆண்டுகள் பழைமையான தான்தோன்றி ஈஸ்வரர் கோயில் கல்வெட்டுகள் பல வரலாற்றுச் செய்திகளைத் தருகின்றன. இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க கோயிலில் திருப்பூரில் இயங்கி  வரும் வீரராசேந்திரன் தொல்லி யல் மற்றும் வரலாற்று ஆய்வு  மையத்தைச் சேர்ந்த பொறியாளர் சு.ரவிக்குமார், க.பொன்னுசாமி, குருக்கள் பா.சண்முகசுந்தரம் மற் றும் நா.சந்தோஷ் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப் போது சுமார் 600 ஆண்டுகள் பழை மையான புலிக்குத்தி நடுகல் ஒன் றைக் கண்டறிந்துள்ளனர்.  

இதைப்பற்றி ஆய்வு மைய இயக்குனர் சு.ரவிக்குமார் மேலும்  கூறியதாவது: பண்டைய காலத் தில் மக்களின் பெருஞ் செல்வ மாக விளங்கியவை கால்நடைச் செல்வங்களே. இந்த மாட்டு மந் தையைப் பாதுகாப்பதற்காக ஒவ் வொரு ஊரிலும் வீரர்கள் இருந்த னர். இக்கால்நடைகளைத் தனக்கு உணவாக உட்கொள்ள வரும் புலி யுடன் சண்டையிட்டு வீரமரணம் எய்திய வீரனின் நினைவாகவும் வீரத்தின் அடையாளமாகவும் எடுக்கப்பெற்ற நடுகற்கள் புலிக் குத்தி நடுகற்கள் என அழைக்கப் படுகின்றன.

இந்நடுகல்லுக்குப் பழந்தமிழ் மக்கள் நீரூற்றிப் பூச் சூடி வழிபட்டதை சங்க இலக்கி யங்கள் மூலம் அறிய முடிகிறது. இந்நிலையில் இங்குள்ள கோயில் தலைமை குருக்கள் பால தண்டபாணி கொடுத்த தகவலின்  அடிப்படையில் ஆய்வு செய்த போது. 80 செ.மீ. உயரமும், 65  செ.மீ. அகலமும் கொண்ட புலி குத்தி நடுகல்லைக்  கண்டறிந்துள் ளோம். இதில் உள்ள மாவீரன் தன்  வலது கையில் ஓங்கிய வாளுட னும் இடது கையில் கேடயம் பிடித்த படியும் புலியுடன் வீரச்சமர் இடுகிறார். வீரனின் அள்ளி முடிந்த குடுமி நேராக உள்ளது. காதில் குண்டலமும், கழுத்தில் நீண்ட பாசி மாலையும், கையில் வீர காப் பும், இடையில் மூன்று மடிப்புகளு டன் கூடிய ஆடையும் அணிந் துள்ள இவ்மாவீரன் தன் இடுப்பில் குறுவாளும் வைத்துள்ளார். இவ்வீரனின் ஓங்கிய வலது கையைக் கடிக்கும் புலி தனது முன்னங்கால்களை வீரனின் நெஞ் சுப் பகுதியில் வைத்து தன் இடது பின்னங்கால்களை வீரனின் வலது  பாதத்தின் மீது வைத்துள்ளது. புலி யின் வால் மேல் நோக்கி உள்ளது. எழுத்துப் பொறிப்பு இல்லாத இந்நடுகல்லின் அமைப்பை வைத்துப் பார்க்கும்போது இந்த வீரநடுக்கல் சுமார் 600 ஆண்டுகள் பழைமையானதாகத் தெரிகிறது என்றார் சு.ரவிக்குமார். இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க கோயிலில் இருந்த கல்வெட்டுகள் கோயில் புனரமைப்பின் போது பாதுகாக்கப்படவில்லை. எனவே  இனிவரும் காலங்களில் திருப் பணியின் போது கல்வெட்டுக ளைப் முறையாக பாதுகாக்க வேண்டும் என்று இவ்வூர் மக்கள்  விரும்புகின்றனர்.