நாமக்கல், ஜன.8- மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் பேருந்தின் முன் பகுதியின் அடியில் சிக்கி விபத்து ஏற்பட்டதில் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய சிசிடிவி கட்சிகள் தற்போது இணையதளத்தில் பரவி வரு கிறது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளை யம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி கள் நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதியில் சற்று போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டு வருகி றது. இந்நிலையில் ஞாயிறு மாலை, சேலம் மாவட்டம் சங்ககிரியில் இருந்து ஈரோடு சென்ற S1 என்ற அரசு பேருந்து, பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தத் தில், பயணிகளை இறக்கி விட்டுவிட்டு மீண்டும் பேருந்தை ஓட்டுநர் இயக்க முற்பட்டதை அறியாமல், மாற்றுத்திற னாளி பெண் ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பேருந்து மோதி கீழே விழுந் தார். அருகில் இருந்தவர்கள் கூச்சலி டவே, அவர் பேருந்தின் அடியில் மாற் றுத்திறனாளி பெண் சிக்கியதை அறிந்த பேருந்து ஓட்டுனர், உடனடியாக பேருந்தினை நிறுத்தியதால், அவர் காயம் ஏதுமின்றி உயர் தப்பினர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அந்த மாற்றுத்திறனாளிப் பெண்ணை உடனடியாக பேருந்து அடியில் இருந்து மீட்டு அவரை ஆசுவாசப்படுத்தி வீட் டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்ப வத்தினை அவ்வழியாகச் சென்ற கார் ஒன்றின் டேஷ் கேமராவில் பதிவான காட்சி இணையதளங்களில் பரவிய தால், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.