districts

img

இயக்குநர் ரவிக்குமாரின் அயலான்

திருப்பூர், ஜன.17- அயலான் படத்திற்கான பாராட்டுக்கள் அனைத்தும் இயக்குநர் ரவிக்குமாரை உற்சாகப்படுத்திய அவரது தாயா ருக்கு சேரும் என சிவகார்த்திகேயன் செய்தியாளர்களை சந் தித்தபோது தெரிவித்தார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் ரவிக் குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள அயலான் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி திரையரங்கில் ஓடிக் கொண்டு வர இருக்கும் நிலையில், திருப்பூர் ஸ்ரீ சக்தி சினிமா திரையரங்கில்  படத்தின் நடிகரான சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர்  ரவிக்குமார் ரசிகர்களை சந்தித்தனர். அப்போது நடிகர் சிவ கார்த்திகேயன் தெரிவித்ததாவது, வெவ்வேறு பகுதிகளில் பிறந்த ரவிக்குமாரும் நானும் இணைந்து தமிழக மக்க ளுக்காக புதுவிதமான படத்தை கொடுத்திருக்கிறோம். அதனை மக்கள் வரவேற்க துவங்கி இருப்பது மகிழ்ச்சி அளிப் பதாகவும் தெரிவித்தார். வெற்றி விழாவிற்கான முன்னோட்ட மாக இந்த கூட்டத்தை பார்ப்பதாகவும், கடந்த முறை திருப்பூர்  வந்தபோது படத்தை வெளியிட்ட பிறகு தான் மீண்டும்  திருப்பூர் வரவேண்டும் என்று நினைத்துக் கொண்ட நிலையில்  தற்போது அதேபோல் திருப்பூர் வந்திருப்பதாகவும், இந்த  கைதட்டல்கள் மற்றும் பாராட்டுக்கள் அனைத்தும் இயக்குநர்  ரவிக்குமாரை உற்சாகப்படுத்திய அவரது தாயாருக்கு சேரும்  எனவும் தெரிவித்தார். மேலும் ரசிகர்கள் அயலான் 2 திரைப்ப டம் குறித்து கூச்சல் எழுப்பியதற்கு நிச்சயமாக இதில் உள்ள  விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு அதனை சரி செய்து சிறப் பான முறையில் அயலான் 2 படம் எடுக்கப்படும் எனத் தெரிவித் தார்.