மாணவர் சேர்க்கை
உடுமலை, ஜூலை 19- திருப்பூர் மாவட்டத்தி லுள்ள திருப்பூர், தாரா புரம் மற்றும் உடுமலைப் பேட்டையில் இயங்கி வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நடைபெற்று வரு கிறது.
இதுகுறித்து மாவட்டம் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது, 10-ஆம் மற்றும் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வர்கள் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர லாம். ஐடிஐ-யில் பயின்ற வர்களுக்கு 100 சதவீதம் வேலைவாய்ப்புகள் நல்ல சம்பளத்துடன் பெற்று வழங் கப்படும். கல்விக் கட்டணம் முற்றிலும் இலவசம். மாதாந் திர உதவித்தொகை வழங் கப்படும். மேலும், விபரங்க ளுக்கு 9942811559, 86680 41629 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுப்பன்றிகள் மற்றும் மயில்களால் பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகள்
திருப்பூர், ஜூலை 19- நிலக்கடலை செடிகள், காட்டுப்பன்றிகள் மற்றும் மயில் களால் அழிக்கப்பட்டு வருவதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி சார் ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தில் சார் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, அவிநாசி வட்டார பகுதிகளில் பரவலாக நிலக்கடலை பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலக்கடலை செடி வளர்ந்து அரும்பு விடும் நிலையில் உள்ளது. இந்நிலையில் அப்பகுதி யில் காட்டுப்பன்றி மற்றும் மயில்கள் ஆகியவற்றால், நிலக் கடலை செடி அழிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அரும்பு வரும் நிலையிலேயே செடிகளை மயில்கள் வேருடன் பிடுங்கி விடுகிறது. காட்டுப் பன்றிகள் நிலக்கடலை செடிகளை மொத்த மாக அழித்து விடுகிறது. இதனால் சாகுபடி செய்த விவசாயி கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அவிநாசி வட் டாரத்தில் குறிப்பாக கானூர், குண்டகம், போத்தம்பாளையம் ஆகிய கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாயிகள் தற்போது காட்டுப்பன்றிகள் மற்றும் மயில்களால் கடுமையாகபாதிப் பிற்கு உள்ளாகியுள்ளனர். ஒரு ஏக்கருக்கு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவழித்து உருவாக்கிய நிலக்கடலை பயிர்கள், போதிய பலன் தராமல் வனவிலங்குகளால் அழிந்து வருகிறது. எனவே வனத்துறை மூலம் காட்டுப்பன்றிகளை சுட்டுக் கொள்வதற்கும், மயில்களை அப்புறப்படுத்து வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கூறப்பட் டுள்ளது.
மழை காலங்களில் 4 அடிக்கு தேங்கி நிற்கும் மழைநீர்
திருப்பூர், ஜூலை 19- பரமசிவம்பாளையம் மடைக்காடு பகுதி யில் மழை காலங்களில் 4 அடி வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என சார் ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள் ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க வடக்கு ஒன் றிய செயலாளர் எஸ்.அப்புசாமி வெள்ளி யன்று சார் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் வடக்கு ஒன்றி யத்திற்குட்பட்ட பொங்குபாளையம் ஊராட் சியை சேர்ந்த பரமசிவம்பாளையம், மடைக் காடு மற்றும் கிழக்குத் தோட்டம் மூக்கில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டு, சாலையில் 4 அடி வரை தண்ணீர் தேங்கு வதுடன், நாள் கணக்கில் நீர் வடியாமல் தேங்கி இருக்கிறது. இதனால், விவசாயிகள், மாணவ, மாணவிகள் இவ்வழியாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே மக் களின் போக்குவரத்து சிரமத்தை போக்க மடைக்காடு மற்றும் கிழக்குத் தோட்டம் பகுதியில் பாலம் அமைக்க வேண்டும்.
அதேபோல பெருமாநல்லூர் ஊராட் சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கொண்டத் துக்காளியம்மன் கோவில் இந்து சமய அற நிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக் கோயில் நிர்வாகம் அருகே செல்லும் தார் சாலை மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந் தமானது. காலம், காலமாக இச்சாலை வழி யாக தான் அப்பியாபாளையம், மலையப்பா ளையம், நம்பியூர் உள்ளிட்ட கிராம பகுதிக ளுக்கு மக்கள் சென்று வருகின்றனர். இந்நி லையில் கோவில் நிர்வாகத்தினர் திடீரென சாலையை மூடும் வேலையில் ஈடுபட்டுள் ளனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மந்தமாக நடக்கும் சாலை விரிவாக்க பணிகள்
உடுமலை, ஜூலை 19- உடுமலை போடிபட்டி ஊராட்சிக்கு உட் பட்ட பெரியகுளம் பிரிவு பகுதியில் விபத்து களை தடுக்கும் வகையில் சாலை விரிவாக்க பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால, ஆறு மாதங்கள் கடந்தும் பணிகள் முழுமையடை யாமல் உள்ளது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் தெரிவிக் கின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், போடிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியகு ளம் பிரிவு மூணார் சாலையில் தினமும் ஆயி ரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மேலும், முக்கிய சுற்றுலாத் தலங்களான அமரா வதி அணை, திருமூர்த்தி மலை உட்பட பல சுற்றுலாத் தலங்களுக்கு இவ்வழியாக தான் செல்ல முடியும். பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் மற்றும் பல கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலையாகவும் இது உள்ளது. இந்த சாலையில் பெரியகுளம் பிரிவு அருகே தொடர்ச்சியாக விபத்துகள் எற் பட்டு வந்தது. இதை தடுக்கும் வகையில் சாலையில் இருபுறங்களிலும் இருந்த பழமை யான 30க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப் பட்டு, சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்க பட்டது. இப்பணிகள் தொடங்கப்பட்டு பல மாதங்கள் ஆகிய நிலையில், இன்னும் பணி கள் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளது. பணிகள் பாதியில் நிற்பதால் மீண்டும் விபத் துகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இரவு நேரங்களில் இச்சாலை வழியாக பய ணிக்கும் பஞ்சாலை தொழிலாளர் மிகுந்த அச் சத்துடன் வந்து செல்கின்றனர். எனவே விரைந்து சாலை விரிவாக்கப் பணிகளை முடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள் ளனர்.
தமிழக அரசு சரியான கூலி உயர்வு பெற்றுத்தர வேண்டும்
கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை
திருப்பூர், ஜூலை 19- ஜூலை 22, 23 தேதிகளில் ஜவுளி உற்பத்தி யாளர்களுடன் நடத்தவுள்ள பேச்சுவார்த்தை யில் தமிழக அரசு சுமூகமாக பேசி சரியான கூலி உயர்வு பெற்றுத்தர வேண்டும், மின் கட்ட ணம் உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வெள்ளியன்று நடைபெற்ற கோவை, திருப் பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத் தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்ட மைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
இந்த கூட்டமைப்பு கூட்டம் செயலாளர் சோமனூர் பி.கோபாலகிருஷ்ணன் தலை மையில் வெள்ளியன்று நடைபெற்றது. இதில், நலிந்து வரும் சாதா விசைத்தறி தொழில் விசைத்தறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதார நிலையை கவனத்தில் கொண்டு மின் கட்டண உயர்வில் இருந்து முழு விலக்கு அளிக்க, மூன்றாண்டு களாக கோரிக்கை வைத்தும், இந்த ஆண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது விசைத்தறியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி யாக உள்ளது. உயர்த்திய மின் கட்டணத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
கடந்த 11 ஆண்டுகளாக சரியான கூலி உயர்வு இல்லாததை கவனத்தில் எடுத்து, ஜவுளி உற்பத்தியாளர்களை அழைத்து பேசி நியாயமான புதிய கூலி உயர்வு பெற்றுத் தர வேண்டும் என தமிழ்நாடு முதல்வர், கோவை திருப்பூர் மாவட்ட நிர்வாகங்க ளுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.