அவிநாசி,மார்ச் 24- திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட அம்மன் திருமண மண்டபம் அருகே அமைந்துள்ள சாலையில் சாக்கடை நீர் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட 24 ஆவது வார் டில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில், அம் மாபாளையத்திலிருந்து திருப்பூர் செல்லும் சாலையில் அம் மன் திருமண மண்டபம் அருகே சாக்கடை கால்வாய் அமைந் துள்ளது. இந்த சாக்கடையில் ஓர் ஆண்டுகளுக்கு முன்பு அடைப்பு ஏற்பட்டது. இதனை சீரமைக்க மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அம்மாபாளையம் கிளை சார்பில் திருமுரு கன்பூண்டி நகராட்சியில் பலமுறை புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக தற்போது பெய்த மழையில் சாக்கடை நீர் நிரம்பி சாலை யில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டும், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலையும் உருவாகியுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக சாக்கடை கால்வாய் அடைப்பை சீர்படுத்துமாறு அம்மாபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.