districts

img

வழிப்பறி கொள்ளையர்கள் கைது செருப்பை கொண்டு துப்பு துலக்கிய போலீசாருக்கு டிஐஜி பாராட்டு

கோவை, ஜூன் 5– சிசிடிவியில் பதிவான செருப்பை வைத்து துப்பு துலக்கி, மூன்று தொடர் கொள்ளையர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 30 சவரன் நகை மற்றும் ஒரு  லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே தொடர் வழிப்பறி  திருட்டு மற்றும் வீடு புகுந்து திருடும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், முத்துகவுண்டன்புதூர் பகுதி யில் நடந்த நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக அங்கு தனிப் படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதி டீக்கடையில் நின்றுகொண்டிருந்த நபர்களை விசாரணைக்கு அழைத்தனர். இதனையறிந்த அங்கிருந்த வர்களில் மூன்று பேர் தப்பி ஓடினர். சந்தேகமடைந்த காவல் துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு தப்பியோடிய நபர்கள் குறித்து விசா ரணை மேற்கொண்டனர். இதற்கிடையே, பல்லடம் பகுதியில் உள்ள செல்போன் கடையில் திருடும் சிசிடிவி காட்சி ஒன்று போலீசாருக்கு கிடைத்தது. அதில் பதிவாகியிருந்த நபரின் கால் செருப்பை  ஆய்வு செய்து விசாரித்தபோது, அந்த செருப்பு கஞ்சா  வழக்கில் கைது கைது செய்யப்பட்டிருந்த அருணாச்சலம் என்பவருடையது என தெரியவந்தது. கால் செருப்பை வைத்து துப்பு துலக்கிய போலீசார், கலங்கல் பகுதியிலி ருந்த அருணாச்சலத்தை பிடித்து அவரிடம் நடத்திய விசார ணையில் சிவானந்தா காலனியைச் சேர்ந்த சதீஷ் கணபதி பகுதியை சேர்ந்த நடராஜன் ஆகியோர் வழிப்பறி மற்றும் வீடுகளில் கொள்ளை அடிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதில், நடராஜன் மீது வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட 80 வழக்குகள் உள்ளது குறிப்பிடத் தக்கது. இதனிடையே, பல்லடம் பகுதியில் செல்போன்  கடையை நோட்டமிட்டு திருடிய கும்பலும் இவர்கள்தான் என் பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து மூவர்  மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களிடமிருந்து 30 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பறி முதல் செய்து கைது செய்தனர். சூலூரில் இந்த ஆண்டில் நடைபெற்ற அனைத்து குற்ற சம்பவங்களிலும்  குற்றவாளிகளைக் கைது செய்த்துடன் 100 சதவிகித திருடுபோன பொருட்களையும் கைப்பற்றிய சூலூர் காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கு கோவை மேற்கு மண்டல டிஐஜி முத்துசாமி வெகுமதி வழங்கி பாராட்டினார்.