நாமக்கல், பிப்.5- கருணை அடிப்படையில் வேலை வழங்க கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மூட்டை தூக்கும் தொழி லாளி தர்ணாவில் ஈடுப்பட்ட சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, சிறு கிணத்துப்பாலம் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் கடந்த 20 ஆண்டுகளாக மூட்டை தூக்கும் வேலை செய்து வருகிறார். மோகன்ராஜ் தந்தை கதிர்வேல் மின்வாரியத் தில் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக, விபத்தில் இறந்து விட்டார். அதனால் தனது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்ப டையில் அரசு வேலை வழங்க வேண்டும் என மோகன்ராஜ் கோரிக்கை மனுவை அளித்துள் ளார். ஆனால், இதுநாள் வரையிலும், மோகன் ராஜ் குடும்பத்தாருக்கு கருணை அடிப் படையில், பணி இழப்பீடும் வழங்கவில்லை வேலையும் வழங்கபடவில்லை. தொடர்ந்து அழைகழிக்கப்படும் நிலையில், விரக்தி அடைந்த மோகன்ராஜ், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், இப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை யடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த காவ லர்கள் அவரை சமரசம் செய்து மனுவைப் பெற்றுக் கொண்டு அனுப்பி வைத்தனர்.